பாடல்: 21
**********************
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல் அவ் இல்
புலிகிடந்த தூறுஆய் விடும்.
மனிதர்களே!
வாழ்வில் மனிதன் உயர, மனைவியின் பங்கு மிக முக்கியம்.
“இல்லாள்” என்பவள் எதையும் இல்லை என்று சொல்லாதவள் ஆகி, உயர் பண்புகள் கொண்டவளாக அமைந்துவிட்டால் ;அந்த மனிதனின் வாழ்வில் இல்லாததே இல்லை. ஆம். எல்லாம் இருக்கிறது என்று அர்த்தம்.
ஒருவேளை அப்படி அமையாமல் கணவனை எதிர்த்து எதிர்த்து கடுமையான சொற்களைப் பேசுபவளாகவும் அமைந்துவிட்டால் ?
அந்த மனிதனுடைய வீட்டை வீடு என்று நான் சொல்ல மாட்டேன். புலிதங்கும் புதர் என்றுதான் கூறுவேன்.
ஏனெனில் புலியின் புதருக்குள் குடியிருக்கும் ஒருவன், புலியால் எந்தக் கணமும் வீழ்த்தப் படலாம்.
மனைவி என்பவள் எதிர்த்து எதிர்த்துப் பேசுவது, புலியின் தாக்குதல் போல் ஒரு மனிதனுக்குத் துன்பமாகும்.
தாக்கிப் பேசிவிட்டு, புலி புதருக்குள் செல்லும். மீண்டும் தாக்கிட எழுந்து வரும். இதுவே புலி கிடந்த தூறு .
இது ஒளவைப்பாட்டியின் மூதுரை.
****
No comments:
Post a Comment