எழுதியவாறே காண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா(று) ஆமோ கருமம் ? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.
மனிதர்களே
நீங்கள் நினைக்கிறீர்கள். நினைத்து ஒரு செயல் நடக்கவும்; அச்செயல் நடக்காமல் போகவும் நீங்கள் செய்யும் செயல்களே காரணம் என்று.
அப்படி அல்ல. உங்களுக்கு பிரம்மன் எழுதியதே நடக்கிறது.
உங்கள் மட நெஞ்சுக்கு நினைவூட்டிச் சொல்லுங்கள், நினைத்தது எல்லாம் நடப்பதில்லை என்றும் அதற்காக வருந்திப் பயனில்லை என்றும் சொல்லிக் கொடுங்கள்.
முன்பிறப்பில் செய்த பாவ புண்ணியமே இந்தப்பிறவியில் நமக்கு அமைகிறது.
நினைத்த எல்லாம் கொடுக்கும் கற்பக மரத்தின் கீழேயே போய் நின்று கொண்டு கேட்டாலும் முன்பிறப்பு விதியால் கசப்பு மிகுந்த எட்டிக்காய்தான் கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதுதான் கிடைக்கும். அதுதான் அவன் விதி.
எழுதிய விதியை யாரால் மாற்ற முடியும்?
இது ஒளவைப்பாட்டியின் மூதுரை.
No comments:
Post a Comment