நான் ஒளவை பேசுகிறேன் ( 16) 14.12.25
****************************************************
பாடல் 16
******************
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனதுபோல் பாங்கு அறியாப்
புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.
ஏ மக்களே!
காட்டுக்குப் போயிருந்தேன். கண்டேன். உடலில் நஞ்சு ஏறி நோயுற்றுக் கிடக்கிறது ஒரு வேங்கைபுலி. கவனிக்கிறான் ஒரு விஷ வைத்தியன் ( விட காரி). குணப்படுத்திவிடுகிறான். புலி என்ன செய்கிறது? அந்த இடத்திலேயே வைத்தியனை உண்டு விடுகிறது.
நாட்டுக்குள் வந்தேன். நன்மை அறியாத ( பாங்கு ) புல்லறிவாளருக்கு ( அற்ப அறிவுடையவருக்கு) உதவி செய்யும் ஒருவனைப் பார்த்தேன். அவனுக்குத் தெரியவில்லை. அவன் செய்யும் உதவி கல்லின் மேல் எறியப்பட்ட மண்கலம் போல் நொறுங்கி விடும்.
புலிக்கு உதவிய விஷ வைத்தியனும் புல்லறிவாளருக்கு உதவுகிறவனும் ஒன்றே.
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment