Friday, 12 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் (  15) 13.12.25 

*************************************************


பாடல் 15. 

*****************

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்

பொல்லாச் சிரகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி. 


ஏ மனிதர்களே! திரும்பத் திரும்ப கூறுகிறேன். 

கல்வியே முக்கியம். கல்வியே முக்கியம். கல்வியே முக்கியம். இலக்கியம் வேண்டுமா? அதில் ஆழ்ந்து செல்க. விண் இயல் பொறியியல் ஞானம் வேண்டுமா? அதில் கல்வி கொள்க.

அதுவே மனிதனின் அகம் விரிய உதவும். 

இதனை அறியாதவர்கள் என்ன செய்கிறார்கள்? 

காட்டிலுள்ள மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி ஒன்று தன் அழகில்லா சிறகுகளை விரித்து தன்னை மயிலாக நினைத்து ஆடுவதைப் போல கவிதை எழுத முற்படுகிறார்கள்.


                                                                          ( தொடர்வோம்)


No comments:

Post a Comment