Friday, 12 December 2025

 சந்த்யாவந்தனம்: (15) 13.12.25

***************************************

மனு தருமத்தில் கால எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை, ஆனால் சந்த்யாவந்தனம் தொடங்கும் காலத்தில் மாற்றம் இல்லை. 

ஆம். சூரியன் உதிக்கும் முன் ஆரம்பித்தல் ; சூரியன் உச்சிக்கு வரும் முன் ஆரம்பித்தல்; மேற்கு வானில் சூரியன் மறையும் முன்பு ஆரம்பித்தல் என்பவை அவை.

தவம் எனும் நிலையை சந்த்யாவந்தனத்தின் மூலம் நாம் அடைய முடியும். 

அதாவது காயத்ரி மந்திரம் எவ்வளவு நீண்ட நேரம் சொல்லப்படுமோ அதுவே தவமாகும். ஜபமே தவத்தின் பாதை. 

ஞானிகள் இவ்வாறு தவம் மேற்கொண்டு நீண்ட ஆயுள் அடைந்தனர். ஆரோக்யம், புகழ், ஞானம், தெள்ளிய அறிவு மற்றும் பரம்பொருளுடன் ஐக்கியம் ஆகியன பெற்றனர் என்பது மிகையல்ல.

மேலும் , சந்த்யாவந்தனம் பசுமாட்டுத் தொழுவத்திலோ கோசாலையிலோ நதிக்கரைகளிலோ அல்லது திருக்கோயில்களிலோ செய்தால் வீட்டில் செய்யப்படுவதை விட;  பல்லாயிரம் மடங்குகள்; கணக்கில் அடங்கா மடங்குகள் பலன் தரக் கூடியது என மனுசாஸ்திரம் கூறுகிறது. 

சந்தியாவந்தனத்தின்போது செய்ய வேண்டிய க்ரியைகளின் விளக்கம் என்ன?

                                                        ( ஈசனால் சிந்திப்போம்)


No comments:

Post a Comment