அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (15) - 13.12.25
***************************************************************************************
பகவான் பாடல்: 14
****************************
“ஒளவை போல் எனக்கு உன் அருளைத் தந்து எனை
ஆளுவது உன் கடன் அருணாசலா”
புறக்காட்சி நாடுவது இளமை. ஆசா பாசம் என்பது புறம். ஒளவை தன் இளமை நீக்கி முதுமை யாசித்து இறைவனை வேண்டிப் பெற்றது அகத்தில் ஈசனைக் காணவே ஆகும். இது ஈசன் கருணை ( அருள்) நமக்கு கிட்டினால்தான் சாத்தியம். காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் ஒருவர். அவரும் முதுமை வரம் பெற்று திருஆலங்காடு ஈசனுடன் உறைந்தார்.
அபிராமி அந்தாதி பாடல் : 42
இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே
“நலம் கொண்ட நாயகி” என்ற வரியினால் தன் கணவனாகிய ஈசன் நெஞ்சில் நீங்காமல் இருக்க வேண்டும் என்ற உண்மை தோன்றுகிறது. பல முறை ஈசன் நெஞ்சில் நடம் ( திரும்பத் திரும்ப ஆடினாள்)என்பது நடம் கொண்ட கொள்கை ஆகிறது. என் கணவர் என்னைப் பிரிய மாட்டார் எனும் செயலையே நலம் கொண்டது என்றார்.
அருள் வேண்டுவோம் - உடலில் முதுமை கிடைக்கவும்; ஈசன் அன்பில் முதுமை கொள்ளவும் அருள் வேண்டி அழுவோம் குழந்தைகள் கிரயான்சுக்கு அழுவதுபோல.
****
No comments:
Post a Comment