Friday, 12 December 2025

 நான் ஒளவை பேசுகிறேன் (  13) 12.12.25 

**************************************************

பாடல் 13. 

*************

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் 

கல்மேல் எழுத்துபோல் காணுமே - அல்லாத

ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர்மேல் எழுத்துக்கு நேர்.


ஏ மனிதர்களே! இந்த உலகில் நல்லார் யார் தீயார் யார் என்று அளக்க மிக எளிதான ஒரு அளவு கோல் இருக்கிறது. 

கருணை உள்ளவர்கள் , கருணை இல்லாதவர்கள் என்று இரண்டே வகை. 

கருணையை நெஞ்சில் ஈரம் என்றனர் முன்னோர்.

நீங்கள் செய்த உதவியை மீண்டும் மீண்டும் பல இடங்களில் கூறி அந்த நன்றி அறிதலை கல்வெட்டு போல சொல்லிக்கொண்டிருப்பவர்கள் நல்லோர். 

கருணை இல்லாதவர்கள் நீர் மேல் எழுத்து போல உடனே மறப்பார்கள்.


***

No comments:

Post a Comment