சந்த்யாவந்தனம்: (11) 9.12.25
*********************************
இந்நூலில் யஜுர்வேதிகளின் அனுஷ்டான முறையே சொல்லப்படுகிறது. எனினும் ரிக், ஸாம வேத அனுஷ்டான முறையும் சில இடத்தில் வேற்றுமை விளக்க சொல்லப் பட்டுள்ளது. சமஸ்கிருத எழுத்துகளின் தமிழ் வடிவத்துடன் தமிழ் அர்த்தமும் எழுதப்படுகிறது.
மந்திரப் பிரயோகம், வியாக்யானக் குறிப்புடன் சில இடங்களில் தரும சாஸ்திரங்கள்,உபநிஷதங்கள், பகவ்த் கீதை, ஆழ்வார்கள், நாயன்பார்களின் சரிதக் குறிப்பும் அருள்மொழிகளும் எடுத்துக் காட்டப்படுகின்றன.
1) முதல் மந்திரம் பார்ப்போம்:
காயத்ரீம் சந்தஸாம் மாதா
இதம் பிரம்ம ஜுஷஸ்வந:
பொருள்:- காயத்ரீ எனப் பிரஸித்தமான வேதமாதா நம்முடைய இந்த மந்திர வடிவமான ஸ்துதியை அங்கீகரித்து அருள் புரிய வேண்டும்.
2) ஆசமனம் :
அச்யுதாய நம:
அனந்தாய நம:
கோவிந்தாய நம:
ஸந்த்யாவந்தனம் பற்றி அனுஷ்டான பிரகாசிகை சொல்லுவதை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.
(பொறுத்துக்கொள்ளவும்;எனது நேர சூழல் பொறுத்து தொடர் தொடர்கிறேன்)
No comments:
Post a Comment