சந்த்யாவந்தனம்: (10) 8.12.25
************************************
உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்துகள் உணர்ந்துகொள்வது முக்கியம். உபாசனைகள் அப்போது பயன் அளிக்கும். சாந்தோக்ய உபநிஷத் இவ்வாறு கூறுகிறது: ஓங்கார உச்சாடனத்துடன் - உச்சரிப்புடன் - அறிந்தவர் அரியாதவர் என்ற இருவகையினரும் கர்மங்களைச் செய்கிறார்கள். அறிவும் அறியாமையும் முற்றும் வேறன்றோ? ஆகையால் ததுவ ஞானத்துடன் சிரத்தியுடன் யோகமுறையை அணுசரித்து எது செய்யப் படுகிரதோ அதுவே மிகவும் வீரியம் உடையதாகும் என்பது தெளிவு.
நெருப்பின்றி விறகு எப்படி எரியாதோ அப்படி ஞானம் இல்லாமல் ஆற்றும் கருமம் பயன் தராது. எல்லாக் கருமங்களுக்கும் எல்லா உபாசனைகளுக்கும் எல்லா மந்திரங்களுக்கும் ஆணிவேர் சந்த்யாவந்தனம் மட்டுமே.
வெவ்வேறு திசைகளிலிருந்து ஒரே ஊஉரை நோக்கி வரும் பாதைகள் போல் எல்லாச் சமயங்களும் இங்கு ஒன்றுபடுகின்றன.
“ஒன்றாகக் காண்பதே காட்சி”
சைவரோ ,வைஷ்ணவரோ, சாக்தரோ, வட் நாட்டாரோ தென் நாட்டாரோ யாராயினும் சந்த்யாவந்தனத்தில் ஜபிக்கும் மந்திரம் ஒன்றே. இதுவே நல்லோர்கள் நமக்குப் பெற்று நமக்கு அளித்த அழிவிலாச் செல்வம்.
(ஈசனால் தொடர்வோம்)
No comments:
Post a Comment