Friday, 14 November 2025

 பனியன் போட்ட குருவி


குழந்தைகள் வருணிக்கும் அழகில்

கவிதை வார்த்தைகளை  நான் எழுதுவதில்லை

குழந்தைகள் காட்டும் மஞ்சநாத்தி

பாம்பும் வந்தால் கத்தும் நொள்ளான்

குதிரைக் கொண்டை போட்டிருக்கும் வெண் கோரைகூட்டம்

முள் கம்பி வேலியைச் சிறகால் போர்த்தும் நாரைகள்

குளிரில் 

குழந்தை அபி சொன்னாள் “பனியன் போட்ட குருவி!” 

ஓ ! மரங்கொத்தி குருவி! 

பெயரற்ற அழகுடன் 

பெயர் புரியா வான் பார்க்கும்

மின்கம்பி அமர் குருவிகளுக்கு என்ன பெயரோ என்றேன் 

தொப்பிக்குருவி என்றாள் குழந்தை அபி

மடக்கி வைப்பேன் 

கவிதை எழுதக் கொணர்ந்த தாளை.

***



No comments:

Post a Comment