Thursday, 13 November 2025

 பரிகாசத்துக்குரிய முட்டை



பிடி நழுவ எது மூலம்  எனத் தெரியவில்லை

பிடி கொள்வதற்கும் காரணம் சரிவர இல்லை

ஒரு செடியாய் மாறினால்

சில மண் வெட்டிகளுக்கும்

ஒரு மரமாய் மாறி நின்றால்

கூர் அரிவாளுக்கும்  பலியாகும் நிலை என்பதால்

ஒரு பறவையாய் மாற எத்தனிக்கும் கணத்தில்

எனது பெருவிருப்பத்தின் முட்டையை

ஒரு மின்மினி உடைத்ததெனில் யார் தான் நம்புவார்கள்

சத்தமில்லாத 

அந்த உடைந்த கணத்தை

பறந்து கொண்டிருக்கும் எந்தப் பறவையும் அறியாது

இப்போது போலவே.


***


No comments:

Post a Comment