மயங்கிய அறிவு மயங்கி இருக்கவே விரும்பும்.
இருட்டில் நடந்த வெளவால்களுக்கு
பகல் ஒளி எந்த பக்கம் என்று அறியவும் ஆசை வராது.
சேற்றில் குளிக்க ஆசைப்படுகின்றன நம் புலன்கள்.
அதிலும் கண் மூடி உறங்கும் மனதை செல்லமாக எழுப்புவதே கடமை.
“எல்லே !” என விளிக்கிறாள் ஒருத்தி
இன்னொருத்தி மனம் எனும் அடங்காப் பிள்ளையை “இளங்கிளியே...” என்பாள்
உடனே அடங்கா மனம் உஷாராகின்றது
“ சில்லென்று கூப்பிடாதீர்கள் எழுந்து வருகிறேன் இருங்கள்”
இப்போது நாமும் கொஞ்சம் சலிக்கிறோம்:-
“ நீ சொன்ன பழைய கதைகள்..... அப்பப்பா! அதெல்லாம்
உன் வாய்க்கே தெரியும்....! வாயில் வந்த கதையெல்லாம் சொல்பவள் நீ!”
அதட்ட ஆரம்பித்ததும் மனம் எனும் தோழி சொல்கிறாள்
“ எனக்கு பதில் நீயே போயிட்டு வா! நீங்களே நான் !”
இப்படி ஐஸ் வைத்து சொல்லும்போது
மனம் எனும் பெண்ணை அறிவு எனும் பெண் இன்னும் விழிப்பாகி
“ வேறு வேலை உனக்கு என்ன இருக்கிறது? எழு!” என்றதும் -
“சரி! எல்லோரும் வந்துவிட்டார்களா! எண்ணிச் சொல்டி” என்கிறாள்
(பிறரை ஒப்புமை செய்து தன் கடமை தள்ளிப்போடுகிறாள்)
அப்போதும் அறிவு எனும் பெண் சோரவில்லை
களைப்படையவில்லை
“வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை
பாடேலோர் எம்பாவாய்!” என்கிறாள்
ஆகவே புலன்கள் சுவைக்கும் நம் மனது - முதலில் நம் கூப்பிடலை ஏற்காது -
கண்டித்தால் நம்மையே செல்லம் கொஞ்சி திசை மாற்றும்
தள்ளிபோட என்ன வழி? என்றுதான் பார்க்கும்! மாயந்தான் காக்க வேண்டும்!
- தொடரும்.
No comments:
Post a Comment