Friday, 11 January 2013

திருப்பாவையில் விசிறியும் கண்ணாடியும்

திருப்பாடல் - 20   
மார்கழி - 20 


பனை ஓலை விசிறி  ! தெருவில் விற்பார்கள். கவனித்துப்பாருங்கள். மறக்க முடியுமா அந்த எளிமையை! எந்த முகப்பூச்சும் பூசாமல் எவ்வளவு அழகு . அந்த ஈர்ப்பு சக்தி பார்த்தீர்களா. திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் மகான் திருக்கரத்தில் பொலியும் அந்த விசிறி அமரத்துவத்தின் குறியீடு. “பிரம்மத்தின் சக்தி பெற்று சுவாசித்து உயிர் வாழும் நீ விசிறிபோல் அந்த பிரம்மத்தினால் இயக்கப்படுகிறாய். மறந்துவிடாதே”
 “உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை” என்கிறது தங்கவரி. அது என்ன தட்டொளி? தட்டுபோல் இருக்கிறது கண்ணாடி. நிமிர்த்திவைத்தாலும் படுத்துக்கிடந்தாலும் உலகை எந்த சுமையும் இல்லாமல் தன்னுள் எடையே இல்லாமல் தூக்குகிறது  - கண்ண பெருமானைபோல! ஆனால் இந்த சக்தி அளிப்பது நப்பின்னைதான்!


திருப்பாடல்:

முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் டந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment