Friday, 11 January 2013

திருப்பாவையில் மாண்புமிகு


மார்கழி :23
திருப்பாடல்:23



“மன்னிய”என்ற சொல் , இந்தியிலும் உண்டு. இதன் பொருள் “மாண்பு மிகு” . நமது மன்னிய அறிவு என்னும் சீரிய சிங்கம் தீயைப் போல் விழித்து செயல்படாமல் குகையில் (மூலாதாரத்தில்) உறங்குகிறது. எங்கள் அறிவில் தீ இல்லாமல் அவியும் நிலை வந்து விட்டது. பூவைப் பூவண்ணா அருள மாட்டாயா?

திருப்பாடல்:

மாரி மலைமுழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment