Monday 19 June 2023

 ஓம். மீண்டும் பிறப்போமா. 

பிறந்தாலும் மனிதப்பிறவி கிடைக்குமா. 

கிடைத்தாலும் சாம வேதீஸ்வரர் கோவிலில் சுவாமி திருமேனி காணவாய்க்குமோ.

லால்குடி அருகே திருமங்கலம் சிவன் கோயில்.

இசை விரும்பும் கூத்தன் என்று சேக்கிழார் வருணிக்கும் தலம்.

பாடல் பெற்ற திருத்தலம்.

ஆனாய நாயனார் புல்லாங்குழலுடன் முக்தி பெற்ற தலம்.

பலா மரம் ஸ்தல விருட்சம்.

தேனும் சுளைகளும் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்ய , வினை தீரும். 

செல்வம் சேர வேண்டுமென லஷ்மி தேவி துதித்த தலம்.

அன்னையைக் கொன்ற மாத்ரு தோஷம் தீர பரசுராமர் வழிபட்டார் ஆதலால் பரசுராமதீஸ்வரம் என்ற பெயர் கொண்ட தலம்.

தந்தையின் கால்கள் வெட்டிய மகன் சண்டிகேஸ்வரர் தன் பாவம் தீர துதித்த தலம்.

ஜைமினி முனிவர் சாம வேதத்தை 1000சாகைகளாகப் பிரித்த தலம் இதுவே.

உதங்க முனிவர் தலம்..

அபய கரம் கொண்டு தெஷிணா மூர்த்தி தலம்.

வள்ளி மட்டும் தனி மயிலில் அற்புதம் அருகில் முருகன் தேவானை.

எத்தனை சிறப்புகள் ஒரே ஓரு கோவிலில்!

(தொடர்புக்கு:- 9865422027 பாலசுப்ரமணிய சிவா)



 





No comments:

Post a Comment