Sunday 11 June 2023

 11.6.23  ஓம். மனிதன் தானே பிறக்கவில்லை. பிறக்க வைக்கப்படுகிறான். நல்வினை தீவினைகளை அனுபவிக்கிறான். கடைசியில் ஓரிடம் சேர்கிறான்.

இந்த மூன்று செயல்களுக்கும் இந்து மதம் அழகிய வரையறை செய்துள்ளது. சைவ சித்தாந்தம் அதனை மேன்மைப் படுத்திக் கொடுத்துள்ளது.

கைலாசமே அம்மை அப்பர் நாம் பிறப்பதற்கான ஏற்பாட்டைச் செய்த இடம். அதனை வெளிப்படுத்த  கைலாச நாத நாதர் திருக்கோயில்.அம்மை அகிலாண்டேஸ்வரி. 

நெல்லிக்குப்பத்தில் பிரதான சாலையில் வலது திருப்பத்தில்  ஓர் உள்ளடங்கிய தெருவில்  வேணுகோபால சுவாமி கோவில் தாண்டி, ஓர் முக்கோணத்தின் உச்சி போல அமைந்துள்ளது. ( முக்கோணத்தின் அடியில் இரண்டு புள்ளிகள் போன்ற கோயிலும் நெல்லிக்குப்பத்திலேயே)

சோழ வல்லிய நல்லூர் என்ற பெயர் கொண்ட இத்தலம்  1400 ஆண்டுகள் முன்பு இராஜ இராஜ சோழனின் அக்கா குந்தவை நாச்சியார் புனரமைத்த கோவில் என்ற கல்வெட்டைக் காட்டும் அர்ச்சகர் தெய்வ நம்பி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். அதாவது அதற்கு முன்பே இத்தலம் இருந்துள்ளது என்பதே உண்மை. ஆலயம் ஆண்டுகள் எல்லை தாண்டியது. 

 அம்மை , “உடனே நான் உன் உதவிக்கு ஓடி வருகிறேன்” என்ற நெஞ்சை அள்ளும்  தோரணையில் நின்ற திருக்கோலம்.

அவசியம் அமைதி பொங்கும் இத்திருத்தலம் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் காண வேண்டிய திருத்தலம். 

அர்ச்சகர் தெய்வ நம்பி செல் எண்:8883776060

திரு விளக்கு ஏற்ற தீப எண்ணெயை ஒப்படைத்து விட்டு நெல்லிக்குப்பத்திலேயே இருக்கும் பூலோக நாதர் திருக்கோயில் சென்றோம். 

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக சிவ விஷ்ணு தலம் இது. பிரசன்ன வெங்கடாசலபதி அலர்மேலு நங்கையும்;  பூலோக நாதர் புவனாம்பிகையும் கண்கொள்ளாக் காட்சி.

பூலோகம் கோவில் சுற்றி அழகிய நந்த வனம்.  என் வாழ் நாளில் கடம்ப மரம் இக்கோவிலில் கண்டேன்.உழவாரப்பணி செய்ய வாருங்கள் என்கிறது. நிலம் / வீடு சம்பந்தப்பட்ட  சிக்கல்கள் தீர/ திருமணத் தடை நீங்க  இத்தலம் ஓர் உன்னதம் . பிரதி செவ்வாய் காலை ஆறரை மணி போல வரச் சொல்கிறார் குருக்கள்.ஹரி.

செல் எண்: 94888047647.விளக்குக்கு எண்ணெய் தந்து விட்டு புறப்பட்டோம். எங்கே? சிவலோக நாதர் திருக்கோயில். அதாவது மனிதர்கள் அடைக்கலம் புகல சிவ லோகமே கட்டி வைக்கப்பட்டால் எப்படி ஒரு மாடல் வேண்டுமோ அப்படி உள்ளது.

ஞான பார்வதி ( சிவகாம சுந்தரி) சமேத சிவலோக நாதர் கோவிலில் சர பேஸ்வரர் சன்னதியும் மிக்க அழகு. இக்கோவிலும் குந்தவை நாச்சியார் புனரமைப்பே. 

பிறப்பு - வாழ்வு - முக்தி எனப்படும் மூன்று திருக்கோயில்கள் அமைவிடமும் இணைக்கப்பட்டால் ஓர் முக்கோணம் கிட்டும்.திருக்கண்டீஸ்வரர் தலமும் கண்டோம். அம்மை:-  ஹஸ்த தாளாம்பிகை.. அம்மை தாளமிட அப்பன் ஆடும் தலம் நடன பாதேஸ்வரர்.திருப்பணி நடைபெறுகின்றது. அன்பர்கள் உதவலாம்.






















   


No comments:

Post a Comment