Friday, 11 December 2015

மகாகவி பாரதியார்


மகாகவி பாரதியார் பற்றி எழுதுமுன் நாள் போய்விட்டது. சரி.  பலர் அவர் கவிதைகள் மட்டும் எழுதினார் என நினைத்துக்கொள்கிறார்கள். அவர் எழுதின கதைகள் எல்லாம் திக்கான பசும்பால் போல இளைஞர்களுக்கு வழி காட்டுவன.
சற்று முன் படித்த ஒரு கதையை அடியேனின் அன்பர்களுக்கு:-
குண்டூசி வியாபாரம்
ஒருவன் ஊசி வியாபாரம் பண்ணினான். பக்கத்துக்கடையிலே ஒருவன் வாழைக்காய் வியாபாரம் பண்ணினான். அவனைப்பார்த்து குண்டூசி வியாபாரியும்பகல் வெயில் நேரத்தில் அரைத்தூக்கமாய்க் கண்ணை மூடிக்கொண்டே சாமான் எடுத்துக்கொடுக்கும் வழக்கத்தைக் கற்றுக்கொண்டான். ஒரு நாள் பகல் வெய்யிலில் குண்டூசிக்காரன் அரைகண்ணைத்திறந்துகொண்டு முக்கால் குறட்டையாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது இலேசான கனவு காணலானான். கையிலே வாய் திறந்த குண்டுசி டப்பி ஒன்று இருக்கிறது. இவன் கன்விலே ஒரு பெண் வந்தாள்.அவள் வந்து தன் புருவத்திலும் கண் இமையிலும் ஜவ்வாது தடவுவதாக கனா கண்டான். கையிலிருந்த குண்டூசி டப்பியை கண்னிலே கவிழ்த்துக்கொண்டு மிகவும் வருத்தப்பட்டான். குண்டூசி வியாபாரம் பண்ணுகிறவன் பட்டப்பகலில் நடுக்கடையில் உட்கார்ந்து தூங்கக் கூடாது 

No comments:

Post a Comment