Friday, 11 December 2015

உபரி சாட்சி


                              
                         

அது ஒன்றும் காண முடியாத செடி அல்ல
ஆனால் அபூர்வத்தின் கையெழுத்து போன்று
கழிவறை சன்னலின் விளிம்பில்
மூன்று அடி ஆழம் தாண்டி வேர் விட்டு
வளர்ந்திருக்கிறது ஆலம் கன்றாய்.
திட்டமிட்டு நட்டாலும்
வளர்க்க முடியாது அப்படி ஒரு ஆலம் கன்று
கட்டிட மண்ணில் விழுந்தது விதி எனினும்
சுவராகும் போது
தப்பித்திருக்கக் கூடாதா என உள் மனம் ஏங்குகிற்று
பக்கத்திலேயே வெண்டிலேட்டர் வட்டம் பரிகாசம்
கழிவறை வருவோர் போவோர் காணாமல்
புறக்கணிக்கின்ற அதிசயத்தின் வேதனையை விடவா பெரிது
என அந்த ஆலமர வேர் நினைக்கும் போது
நானும் 
மற்றுமொரு உபரி சாட்சியாகத்தான் இருந்தேன்.

No comments:

Post a Comment