அழைத்தேன் சொற்களை மெல்ல அவை விசும்பின
நான் எதிர்பார்க்கவில்லை அட யார்தான் அறிவார்
இத்தனை சீக்கிரம் அவர் மறைவாரென்று
தனிமையில் வளர்ந்து ஓங்கிய மூங்கீல் முறிந்ததுபோல்
சட்டென அவர் உயிர் பிரிந்திருக்கக் கூடும்
ஒரு கம்பீரம் ஒரு அடர் கனமான குரல்
இதம் படிந்த உத்தரவின் வீச்சு
கலை இதயங்களை இரசிக்கும் மேன்மை ருசி
புத்தக நெஞ்சில் மலர்ந்த உயர்ந்த ஆங்கிலம்
போலிகளை விமர்சிக்கும் வெளிப்படைச் சிரிப்பு
கற்பித்தல் எப்படி இருக்கக்கூடாது என்பதை அறிவுறுத்தும் தெளிவு
எனக்குத்தெரிந்து அவர் ஒரு தைரிய உருவம்
அசல் கலைக்கு உள்ளே பூக்கும் தாகமும் தேடலும்
எதுவும் போகவில்லை சார்!
இருக்கிறீர்கள் மாணவ மாணவிகளுக்கு உரைத்த சொற்களில்
ஒன்று கேட்கிறேன்
வட்டம் ஐந்து நெய்வேலி சுடுகாடே ஏனிந்த அவசர அழைப்பு?
8.12.2015 பிரதோஷ நாள் என்றா!
No comments:
Post a Comment