Saturday, 12 December 2015

விண்ணப்பக் கலிவெண்பா


வள்ளல் பெருமானார் அருளியது. அருள் பெற இது ஒன்றே போதும் என்று அன்னதான ஆதீனம் மேட்டுக்குப்பம் வாழ் ஞான வள்ளல் தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் முன்னுரை ஒன்றில் கூறியுள்ளார்.
எப்படி இறைவனைத் துதிக்க வேண்டும் என்ன கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் வள்ளலார் நமக்கு அருளிய கலி வெண்பா வடிவம் அதனை புதுக்கவிதை வடிவில் முயன்று எழுதும் வடிவம் இது.
 அனைவரும் அறிய முற்படுவோம். காலம் சிறிது.
                                                         பா.சத்தியமோகன் 13.12.15

“ குளிர் நெஞ்சம் உடையவனே பாசநீக்கம் செய்பவனே
தேடியும் காணமுடியாத தலைமை உடையவனே
உனக்கொரு விண்ணப்பம்
வேறாக உட்கொண்டு என்னை இகழாதே
எனக்குள் ஒளியாமல் உள்ளபடியே உரைக்கின்றேன்
கடும் சொல் தவிர வள்ளலே உனது அன்பர்களுக்கு
இனிய சொல் தந்ததும் இல்லை
பணிவுடன் ஒன்றைத் நான் தந்ததும் இல்லை
தீய சொல்லாகிய பொய் சொல்வதென்றால் பூரித்து மகிழ்கிறேன்
ஆனால் உண்மை பேசுவதை நான் விரும்பியதே இல்லை
வாயால் துன்பம் விளைவிக்காத வாய்மை எனக்கில்லை
மெய்யால் துன்பம் விளைவிக்காத மெய்ம்மை எனக்கில்லை
உள்ளத்தால் துன்பம் விளைவிக்காத உண்மையும் எனக்கில்லை

பொருந்தா நெறியாகிய  உயிர்க்கொலையாகிய
பொல்லாத விரதம் பூண்கிறேன் உண்கிறேன்
கொல்லாத விரதம் பூண்டதில்லை

பிறவிகளை மேலும் மேலும் வருவிக்கும்
இருள் சேர்க்கின்ற புகழை விரும்பினேன்
நல்ல நெறிக்குப் போகாதவர் புகழைக் கேட்க விரும்புகிறேன்
வானவரும் தானவரும் புகழும் உந்தன்
பொருள் சேர் புகழைக் கேட்க நினைத்ததும் இல்லை
வஞ்சம் கொண்டு இனிமையாக நடிக்கும்
நுண்ணிய இடை மாதர்களுக்கு ஏவல் புரிந்தேனே தவிர
உனது பொன் அடிக்கு என்றுமே தொண்டு புரிந்தது இல்லை
மூன்று குற்றமாகிய காமத்தாலும் கோபத்தாலும் மயக்கத்தாலும்
நெருக்கப்பட்ட என் மனம் செக்கில் இடப்பட்ட எள் போல
சிந்தை நசிந்தது தவிர
மூன்று குற்றம் முறிக்க நான் எண்ணியதே இல்லை
                                                                     ( தொடர்வோம்_)


 

No comments:

Post a Comment