Wednesday, 16 December 2015

மலை உச்சி வார்த்தை


அன்று ஒரு நாள்
பர்வதமலை உயரத்திற்கு
நானும் மகன் அருண்சித்தார்த்தும் ஏறலானோம்
பயணப்பட பயணப்பட நடந்துவந்தது  முதலில் உற்சாகம்
வெய்யில் ஏற ஏற தனிமையும் களைப்பும் கூட ஏறின
சுற்றிலும் பாறைகள் சுற்றிலும் பாறைகள்
மலை உச்சி நெருங்குவோமா என ஆகிவிட்டது
அங்கிருந்து தரையைத் தேடினால்
அது ஆகாயமாய் விலகித் தெரிந்தது
ஏறு ஏறு விடாதே இலக்கை அடை என்று மூச்சு விட்டோம்
அயர்ச்சி வாட்டும்போது சுழன்ற கண்களில்
ஒரு பாறையில்
அம்பிகையே எழுதியதுபோலவும்
பாரதியார் வைத்த மீதி வார்த்தை போலவும்
கண்டேன் அச்சொல்லால் மன உச்சிக்குப் போக வாய்த்தது
அது என்ன சொல்? ஆ! மனனம் செய் நெஞ்சே -
“ஏக்கம் தவிர்”


 

No comments:

Post a Comment