Tuesday, 15 December 2015

நூலும் நூலும்




அசையும் மெல்காற்றின் நடுவே
வேப்பமரம் தாண்டி நடந்தபோது
ஏதோ அந்தரத்திலிருந்து இறங்கிய பச்சைப்புழு ஒன்றை
பள்ளிக்கூடத்தில் பார்த்ததுபோவே
கண்ணறியாமல் மெல் சரடாய்
குதூகலமாய்க் காணநேர்ந்தது
மரம் நீங்கி தொங்கிக் கொண்டிருந்தது சர்க்கஸ் போல்
தன் நாவிலிருந்து நூல் கட்டி
உயர மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறது .
நாக்கில்  நல்ல நூலால் என்னால் ஏற முடிவதுபோல்
நெஞ்சில் நல்ல நூல் இருக்கும் மனிதா
உன்னாலும் மேலேற முடியும்”
என்று சொன்னது அரைக்கணம் உணர்ந்தேன் பிறந்தேன்!

No comments:

Post a Comment