காலை ஆபீஸ் வரும்போது
மஞ்சள் காமாலை தடுப்பென அப்பா உணர்த்திய
“சி” வைட்டமின் சிகரமென அப்பா பதிவித்த
செடி இலைகளைப்பறிக்கும் போது தவறுதலாய்
வேருடனும் வேர்மண்ணுடனும் இறக்க நேரிட்டது அது
என்ன இருந்தாலும் அப்பா பறித்தது போலவோ
அவரின் லாவகம் போலவோ வராது என்பதை
உணர்த்தவும் அவகாசம் தராமல்
காய ஆரம்பித்தது கீழாநெல்லிச்செடி
No comments:
Post a Comment