பாடல்-976:
குற்றமற்ற போர்க்களம் அது
அரக்கியர்களோ ஓவியப்பாவையின் அழகுடன்
இறந்த வீரர்கள் மீது புரண்டு அழுகிறார்கள்
விழும்போதெல்லாம்
அம்பு போன்ற அழகிய கண்கள்
இமைக்கவும் இல்லாமல்
இறந்து போனது போல தெரிகின்றார்கள்
இப்படிப்பட்ட செயல்கள் யாவும்
உயிர் ஒன்று உடல் இரண்டு என
நிரூபிக்க நிகழ்கின்றது போலும்?
பாடல்-977:
இளமை மிகு அரக்க மகளிர் ஓட்டம் உயிர்களை நாடி
ஓடும் உடல் போல் உள்ளது
இறந்த பிணக்குவியல் நடுவே
கணவரின் உடல்களைக் கண்டுபிடித்தனர்
இறந்த உடல் பார்த்து இறந்தனர்
மேல் உலகம் சென்றனர்
இவர்கள் வருவதற்கு முன்பே
தேவமகளிர் தமது கணவரைத் தழுவியதைக் கண்டு
ஊடல் கொண்டனர்.
பாடல்-978:
மை தீட்டிய கண்\
திருமகள் போல் அழகு
இரண்டும் கொண்ட அரக்கப்பெண்
கூத்தாடி விழுகின்ற தலையிலாத உடலை
அதன் தலையுடன் சேர்த்து
“எம் உயிர் துணைவனை காட்டுபவன் ஆகுக” என
அழுகின்றாள் கை கூப்புகின்றாள்.
பாடல்-979:
ஓவியத்திலும் தீட்டமுடியாத பூங்கொடி போன்ற
அரக்க மகள் இறந்த கணவனின் அறுபட்ட தலையை
கையில் ஏந்தி நிற்கின்றாள்
தலையில்லாத உடலோ துள்ளுகின்றது
ஆடுகின்ற கணவனைக் கண்டு
“ன்ந்த்ஐவனே! வேந்தனே! நீ அலசி ஆடிவிட்டாய்
போதும் விடு! உனது நடம் ஆட்டம்”
கூறிக் கொண்டே தன் தலைவன் உடலைத் தழுவுகிறாள்
பாடல்-980:
அசோகவனத்தைக் காவல் செய்யும்
பருவத் தேவர்கள்
அனைவரும் கண்ட காட்சி இது!
“இதற்குப்பின் உயிர் பிழைத்தவர்
எவருமில்லை” என்ற செய்தியுடன் ஓடினார்கள்
இராவணன் திருவடி வீழ்ந்தார்கள்
“பெரும்படை யாவும் மாய்ந்தது” என்றார்கள்
பாடல்-981:
இராவணன் இணை
மயன் மகள் மண்டோதரி
கயல் மீன் ஒத்த கண்கள் நீர்வடிக்க
கருமேகக்கூந்தல் நிலத்தில் புரளபுழுதியில் அளாவுற
பிரம்மன் மகன்
புலத்தியன் மகனாகிய
விச்சிரவசுவின் மகனாகிய
இராவணன் திருவடிகளில் விழுந்து
வயிற்றில் அடித்துக் கொண்டு அலறித் துடித்தாள்.
பாடல்-982:
இராவணன் திருவடிகளில்
இப்போது அழுது தொழுதவர்கள்
இலங்கையில் வாழும் மகளிர் மற்றும்
அசோகவனக் காவலராம் பருவத் தேவர்களும்!
பருவத்தேவர்களுக்கு இராவணன் தோல்வி
சிந்தையிலே களிப்பு வந்தது
வெளியில் மட்டும் அழுதனர்!
(அக்ககுமாரன் வதைப்படலம் முற்றிற்று)
பாடல்-983:
அப்போது அச்செய்தி கேட்டான்
ஆண்சிங்கம் இந்திரஜித்!
முன்பே சிவந்த விழி இப்போது
எரிக்கும் விழி ஆகியது சினம் வீங்கியது
எப்படிப்பட்ட உலகமும் குலைந்து நடுங்க
மிகுந்த சினம் ஆனான்.
பாடல்-984:
ஒப்பற்றவன் இந்திரஜித்
“அரத்தால் சுடரும் ஒளி வேல் அக்ககுமாரன்
இறந்தான்” எனும் சொல்கேட்டு
அனல் பெருமூச்சு உயிர்த்தான்
திரிபுரம் எரிக்க
மேருமலையை வில்லாக வளைக்கப்புறப்பட்ட
பரஞ்சுடர் சிவபெருமான் என எழுந்தான்.
பாடல்-985:
வானின் உயரம் என்ன? என
அளக்கும் தேரில் இந்திரசித் ஏறினான்
ஆயிரத்து இருநூறு பேய்கள் பூட்டிய தேரில்
சக்கரங்கள் பூட்டிய தேரில் ஏறும்போதும்
அவன் கர்ஜித்த வீர உரைகள்
ஒன்றுடன் ஒன்று கோர்த்து
நெரும் திசைகள் பிளந்தன
அண்ட கோளம் பிளந்தது.
பாடல்-986:
இந்திரஜித் கர்ஜித்தபோது
அவனது வீரக்கழல்களும் பேரொலி செய்தன
பேரிகைகளும் இடியும் அஞ்சின
இந்திரன் உயிர் நடுங்கிற்று
தேவர்களின் தலைவர்களான மும்மூர்த்திகள்
“போர் உச்சம் அடிந்துவிட்டது” என நினைத்து
யோகம் கைவிட்டனர்!
பாடல்-987:
தம்பி அக்ககுமாரனை
எண்ணியபோதெல்லாம் தாரை தாரையாக
கண்ணீர் ததும்பிற்று இந்திரஜித்துக்கு!
கட்டமைப்பான வில்லை நோக்கி
வாய் மடித்து உருத்துப் பார்த்து சினமாய் நகைத்தான்
மரக்கொம்புகளில் வாழும்
நிலையற்ற மாயவாழ்வு வாழும் குரங்கினாலா
என் தம்பி தேய்ந்தான்! அல்ல!
என் தந்தை இராவணன் புகழ் தேய்ந்தது!
பாடல்-988:
இந்திரஜித்துக்குத் துணையாகத் திரண்ட
வேல்படைக்குழு
வில் படைக்குழு
மலையும் பிளக்கும் வாள்படைக்குழு
இவற்றை எண்ணிக்கூற முடியாது
ஆனால்
இரு பக்க நிலத்தையும் சேறாக்கும் மதநீர் சொரியும்
சிறுகண் யானைப்படைத் தொகை பன்னிரண்டாயிரம்
தேர்களின் தொகையும் அதுவே.
பாடல்-989:
ஒரு கண் கண்ணீர் பெருக்க
மறுகண் சினத்தைப் பாய்ச்சிட
இந்திரஜித் கோபம் எந்த அளவோ
அதே அளவு செயலின் வேகமும் இருந்தது
ஆதலால்
“ஏய்!” எனக்கூறும் நேரத்திற்குள்
இரவணன் இருந்த அரண்மனை வந்துவிட்டான்
பன்னிரெண்டாயிரம் குதிரைப்படையுடன்
கொடும் வாள் ஏந்திய அரக்க அரசர்களுடன்.
பாடல்-990:
தந்தையின் தாளில் விழுந்தான்
இறந்த தம்பிக்காக அழுதான்
இந்திரஜித் தோள்பற்றி
இராவணனும் ஏந்தித் தழுவினான்
அழுது சோர்ந்தான்
வாள் நெடும் கண் மாதர்கள்
வயிற்றில் அடித்துக் கொண்டு அலறினார்
அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு
இந்திரஜித் சொல்வான்:-
பாடல்-991:
“அரசே! ஒன்றை நீ உணர மறுக்கிறாய்
துன்பம் அடைந்த பின் வருந்துகிறாய்
குரங்கின் ஆற்றல் அறிந்தும்
செல்லுங்கள் போருக்கு என அனுப்பி
படைகள் தேயுமாறு கொன்றுவிட்டாயே
நம் அரக்கர் படை குழு குறைந்து விட்டதே!
பாடல்- 992:
என் தந்தையே
கிங்கரர்கள் அழிந்தனர்
சம்,புமாலி அழிந்தான்
சேனைத் தலைவர் ஐவர் அழிந்தனர்
என்ன காரணம்?
அக்குரங்கே சங்கரப்ன் பிரம்மன் திருமாலின் கூட்டு
எனக் கருதத் தக்கது.
பாடல்-993:
திசை யானையின் வலிமைகூட
முன்பு அழியும்படி செய்து
மூன்று புரமும் எரித்த முக்கண்ணன் சிவனையே வென்றாய்
சிவனது கயிலை
மூன்று உலகமும் வென்றாய் அப்படிப்பட்ட நீ
குரங்கை முதலில் வென்றிருக்க வேண்டும்
அப்படிச் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறாய்
இதனை புலம்பல் என்று தான் சொல வேண்டும்
“வெல்வோம்” என நீ இப்போது சொல்வது பிதற்றல்.
பாடல்-994:
“ஆயினும் ஐயனே!
மனம் நொய்யாதோஅண்மைத் தொழில் புரியும் குரங்கை
“ஏ” எனும் நேரத்துள் பற்றிப்பிடித்துத் தருவேன்
துன்பம் என உழல ஒன்றுமில்லை
நீண்ட காலம் வாழ்க” என
நெடிய புகழோடு போருக்குப் போனான்.
பாடல்-995:
இந்திரஜித்
வீரக்கடமை புரிய புறப்பட்டான்
பிர்ளய காலத்தில் தனியே நிற்கும்
மாமேருமலை போல நிற்கிறான்
அவனைச் சுற்றிலும் ஊழிக்கடல் போல
அழகிய தேர்கள் குதிரைகள் வீரர்கள்!
முகபடாமும் சிவந்த கண்களும்
கொடிய கோபமும் கொண்ட யானைகள்!
அரக்கர் சேனைகள்!
பாடல்-996:
இந்திரஜித்
எல்லாத்திசை உலகங்களும் வென்றவன்
எனினும் அனுமன் ஆற்றலை
ஒரு கணம் வியந்து உவகை கொண்டான்
பலரும் நடுங்கினர்
பாடல்-997:
இலை வடிவ அணிகலன்கள் தரித்த இந்திரஜித்
“போர்க்களம் காண்கிறான்
பிணமும் இரத்த வெள்ளமும்
அளவிலா ஆயுதமும் தடுக்கிறதே
இது போர்க்களமே அல்ல
மலைகளும் கடல்களும் காடுகளும் பெற்ற
இன்னொரு உலகம்! அம்மா!” என நினைத்தான்.
பாடல்-998:
அது வரை
கவலை ஏதும் அடையாத இந்திரஜித்
கவலை உற்றான்
ஓர் விம்மல் கொண்டான்
“கடல் போன்ற பெருமை மிகு அரக்கர்
ஒப்பில்லாத ஆற்றல் அரக்கர் அனைவரையும்
அழித்தது ஒரே ஒரு குரங்கு எனில்
இராமனுக்கு எவ்வளவு ஆற்றலோ!”
என நினைத்தான்.
பாடல்-999:
இறந்து கிடந்தவர்களைப் ப் அர்க்கிறான்
அடடா!
அத்தனை பேரும் இலங்கை அரசுக்கு
கண் போன்ற அரக்கர்கள்
எண்ண முடியாத பெருமை மிகு அரக்கர்கள்
உதட்டை மடித்து கோபிக்கிறான்
ஆறாத புண்ணில் கோல் இட்டது போல்
மான உணர்ச்சியால் புழுங்குகிறான்.
பாடல்-1000:
காட்டில் என் அத்தை சூர்ப்பணகைக்கு
அவமானம் அடைந்ததும்
கரன் இறக்க நேரிட்டதும்
தம்பி அக்க குமாரன் இறந்ததும்
இரண்டே இரண்டு மானிடர்களால்!
ஒரே ஒரு குரங்கால்!!” என்றால்
என் வீரம் எவ்வளவு சிறந்தது! அடடா!
இழிவு பட தன்னையே
எண்ணிக் கொண்டான் இந்திரஜித்.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment