Saturday, 25 January 2014

ஓ! மாமன்ன சரித்திரமே.. உடையாளூர் வாழ் தெய்வமே








 அன்று முதல் இந்த வினாடி வரை எண்ணி எண்ணி பெருமிதப்பட நமது சரித்திரம் நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் தந்துள்ளது, இருந்தாலும் எண்ணி எண்ணி அழுவதற்கும் - நெஞ்சம் குமுறுவதற்கும் சில இடங்கள் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அதில் முதலிடம் இதற்குத் தரலாம்.
நமது இதயத்தின் அலட்சியத்தை - தமிழர்களின் சரித்திரம் போற்ற அறியாத பேதமையை - தடித்தனத்தை - சுட்டிக்காட்டுகின்றது  வரலாற்று முக்கியத்துவமான இந்த இடம். ஆம். சரித்திரத்தின் மாபெரும் பெருமையாம் ராஜராஜ சோழன் நினைவிடம் தான் நீங்கள் காணும் போட்டோ. கும்பகோணம் அருகில் தாராசுரம் தரிசித்துவிட்டு அப்படியே இருபது நிமிஷப்பபயணத்தில் உடையாளூர் சென்று பார்க்கலாம். நிறைய வீடுகள் நடுவே சிறிய கீற்று கொட்டகையில் மாலை ஏழு மணி சுமாருக்கு என் மகன் அருண்சித்தார்த் எடுத்த புகைப்படம் இது ( 15.1.2014). அந்த மகா மன்னனின் தஞ்சை கோவிலுக்காக அப்படி இப்படி என்று மார்தட்டும் தமிழினம் இராஜ இராஜ சோழனின் நினைவிடத்தை இப்படி விடலாமா? வாய்விட்டு அழலாம் போலிருந்தது.

No comments:

Post a Comment