Thursday, 14 November 2013

சுந்தர காண்டம் 626-650



பாடல்-626

“பிரம்மனிடம் இராவணன்
பெற்ற சாபம்
எனக்குத் தெரியாது திரிசடை கூறும் வரை!
ஆம்
திரிசடை என் அச்சம் போக்கி கருணை தரும் தாய்
சத்தியமும் ஆண்மையும் உள்ள
ஒளிவீசும் மகுடம் கொண்டவிபீஷணனின் மகள்.

பாடல்-627:
அந்த சாபம்
இராவணம் மீது இருப்பதால் தான்
அறம் வெல்லும் என்று நம்பி வாழ்கிறேன்
இராமனின் வலிமை வெல்லும் என வாழ்கிறேன்
என் கற்பின் தூய்மை உலகறிய
காட்ட இயலும் என்று நம்புகிறேன்.

பாடல்-628:
அரக்கன் இராவணன்
இளவல் இலக்குவன் அமைத்த பர்ணசாலையை
தண்டகாரண்யத்திலிருந்து என்னோடு சேர்த்து
அகழ்ந்து கொண்டு
பெயர்த்து எடுத்து இங்கு வைத்துள்ளான்
உண்மை உணர்த்த
உன் கண்களால்  அனுமனே நீ பார்ப்பாயாக.

பாடல்-629:

ஆதலால் இந்த இடம் விட்டு
நான் நீங்குவது இயலாது அனுமா!
இராமனது திருமேனி ஒத்திருக்கின்ற
புதிய தாமரைமலர்கள் கொண்ட
பொய்கை நீர் வரை
சில சமயம் நடப்பது மட்டும் உண்டு -
தளரும் உயிரைக் காக்க!

பாடல்-630:

அன்பிற்கினிய சீதை
முடிவாகச் சொன்னது இது:-
“ஆதலால் அனுமனே
நீ கூறியது காரியம் அல்ல
வேத நாயகனிடம் திரும்பிச் செல்
அதுவே உனது காரியம்”
குற்றமற்ற அனுமன் கூறியது:-

பாடல்-631:

அடுத்த கணம் ஆகும்முன்
அனுமன் ஐயம் நீங்கினான்
துன்பமும் போனது
குற்றமற்ற அனுமன் கூறியது இது :-
“நன்று நன்று
உலகை உடைய நாயகனின்
துணையான பெருந்தேவியின்
தவத் தொழில் இது” என
சிந்தை களித்தான் அனுமன்.

பாடல்-632:

“இராவணனால் இந்த உலகம் இருளும் காலம் இது
இனி
தெளியும் காலம் வரும்
சில பகல்கள் பொறு
உயிரைப் போற்றி வைத்திரு
மருளும் மன்னவனுக்கு
யான் சொல்ல வேண்டிய வாசகம் அருள்வாய்” என
சீதாப்பிராட்டியின் திருவடி தொழுதான்.

பாடல்-633:
“நீதியோனே
உன்னை நோக்கிப் பகர்கிறேன்
இன்னும் இங்கு ஒரு மாதம் தான் இருப்பேன்
பிறகு
உயிரைப் பிடித்து வைத்திருக்க மாட்டேன்
அந்த இராமன் மீது ஆணை
இதனை மனதில் கொள் நீ”

பாடல்-634:

“மாலை தவழும் திருமார்பனுக்கு
மனைவியாக இல்லை எனினும்
தயவு எனும் ஈரம் அகத்தில் இல்லை எனினும்
தனது
வீரத்தைக் காத்துக் கொள்ளச் சொல்”
இதனை நீ வேண்டுவாயாக.

பாடல்-635:
பிறர் புகழும்
வெற்றி உடைய
இளையவன் இலக்குவனுக்கு
இந்த ஒரு வார்த்தை கூறுவாய் அனுமனே
“இராமன் கட்டளையால்
பஞ்சவடியில் எனைக் காத்திட்டவனுக்கே
நடுவில் ஏற்பட்ட
கொடிய சிறை வீட்டிலிருந்து என்னை
மீட்கும் பொறுப்பு உள்ளது”

பாடல்-636:
“அனுமனே இன்னும் ஒரு மாதம் தான்
நான் செய்தவம் தீர்ந்துவிடும்
அதற்குள் இராமன் வராவிட்டால்
புதிதாக பெருகும் கங்கை நீரில்
அடியேனுக்கும்
தனது சிவந்த கைகளால்
இறுதிக்கடன் செய்யச் சொல்லி செப்புவாய்”

பாடல்-637:
“இலங்கையில் இறக்கின்ற
சீதையாகிய நான்
சிறப்புமிகு மாமியார் மூவரையும்
தொழுது வணங்கினாள்” என
அறத்தின் நாயகன் இராமனிடம் சொல்
என்னிடம் அருள் இல்லாத இராமன் மறந்து விட்டால்
ஐயா அனுமனே ! நீ தெரிவிக்க மறக்காதே”

பாடல்-638:
மிதிலை நகர் வந்து என் கரம் பற்றி
மணம் செய்த நாளில்
“இந்த உலகப்பிறவியில் உன்னைத் தவிர
இரண்டாவதாக ஒரு மாதரை
சிந்தையாலும் தொடேன்” என்ற
செம்மையான வரம் தந்த வார்த்தையை
 இராமபிரான் திருச்செவியில் கூறு அனுமா..!

பாடல்-639:
“இராமனால் மீட்கப்படாமல்
இலங்கையிலேயே நான் இருந்து
இனிய உயிர் மாய்ந்து ஒஓன்உம்
மீண்டும் வந்து பிறந்து
இராமன் தன் மேனியைத் தீண்டுகின்ற
தீவினை தீர்ந்த வரத்தை
தொழுது வேண்டினாள் சீதை”
என்று விளம்புக அனுமனே.

பாடல்-640:
இராமன்
அரச பதவி ஏற்று ஆள்வதைப் பார்க்கவில்லை
சிறந்த மணிகளோடு கழுத்தில் கயிறு கொண்ட
யானை மீது பவனி வருவதும் பார்க்கவில்லை
பலப்பல திருநாட்களுக்கு ஏற்ற
இராமபிரானின் கோலங்கள் காண விதி இல்லை
என்ன சொல்லி என்ன பயன்
என் ஊழ்வினை எண்ணி நோகிறேன்.

பாடல்-641:
இராமன் எனை மீட்க இங்கு இலங்கை வரமாட்டான்
என்னை மீட்க வரமாட்டான்
தன்னையே எண்ணித் தளர்கின்ற
கோசல மக்களே அவனுக்கு முக்கியம்
அன்னையின் ஏக்க நோயே முக்கியம்
நந்தி கிராமத்தில்
பரதன் அனுபவிக்கும் இன்னல் நோய் தீர்வதே முக்கியம்
அயோத்தி தான் செல்வான்
இங்கு எப்படி வருவான்!

பாடல்-642:

அனுமா இதுவும் கூறு:
“என் தாய் தந்தைக்கும்
உறவினர் முழுமைக்கும்
என் வணக்கம் வ்¢ளம்புக
கவியின் மன்னன்
வானரத் தலைவன் சுக்ரீவனிடம்
சுந்தரத் தோளன் இராமனை
தொடர்ந்து காத்திடச் சொல்க
அழிவிலாத திருநகர் அயோத்திக்கு
அரசனாக்கச் சொல்”

பாடல்-643:

இப்படிப்பட்ட சொற்களை
சீதா தேவி கூறியதும்
“தையலே! இன்னமும்
துன்பப் படுதலை விடவில்லை” என்றான் அனுமன்
இனிய உரைகள் இயம்புவான் இப்படி:

பாடல்-644:

நீ இலங்கையில் இறப்பாய்
அதுவே உண்மை
உன் பிரிவால் தளரும் இராமன்
நீ இறந்தும் உயிர் வாழ்வான் தானே
காட்டைவிட்டு
அயோத்தியில் புகுந்து
அரச மகுடம் அணிவான் தானே
இதுவும் உண்மை தானே

பாடல்-645:

கற்புக்கரசியே
உன்னைப் பிறர் வெறுத்து விலகி ஓடுமளவு
கொடுமைச் சிறையில் வைத்த
இராவணன் உயிர் வாழ்வானாம்
பொய்க்காத வில்லை உடைய இராம இலக்குவன்
பின் வாங்கிப் போவார்களாம்
இந்த சொற்களோடு ஒப்பிட
எந்த வார்த்தையாவது உண்டா?

பாடல்-646:

நல்லவளே
உன்னை நலியச் செய்த தீயர்வர்களை
கொல்லமாட்டோம்
எமது உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு
இராமனிடம் எல்லோரும் செய்வோம்
எம் அரசன் இராமன்
தனது வில்லினை
புத்தம் புதிதாக வைத்திருக்க வேண்டுமல்லவா!

பாடல்-647:

கடக்க முடியாத
நீந்த முடியாத துன்பக்கடலில்
பங்கெடுத்துக் கொண்டு நீந்தாமல் நாங்கள் இருந்தால்
தேயாத பெரும் செல்வமான
கிஷ்கிந்தை அரசை ஈந்தவனுக்கு
உன்னை மீட்டுத் தராமல் நாங்கள் ஓய்ந்தால்
மீட்காமல் சுகம் பெற்றால்
எம்மை விட உயர்ந்தவர்கள்
யார் இருக்கப் போகிறார்கள்?

பாடல்-648:

“நல் பலன் அளிக்கும் வேள்விகள் புரியும்
நல்லோர்களை முனிவர்களை
கொன்று தின்ற அரக்கர்கள் குடலை
பேய்கள் தின்னும்படி கொல்வேனே தவிர
நாடு திரும்பமாட்டேன்” என
தண்டகாரணிய முனிவர்களுக்கு
வாக்களித்த இராமனுக்கு
உன்னை மீட்பது இயலாத காரியமோ.

பாடல்-649:

அகைவர்களால்
சிறை வைக்கப்பட்ட உன்னை
“மீட்டோம்” என்று சொல்லமுடியாமல்
வெறும் கையோடு திரும்பினால்
நாட்டு மக்கள் ஏற்பார்களா
நல்லவர்கள் ஏற்பார்களா
நல்ல நூல் கற்றவர்கள் ஏற்பார்களா

பாடல்-650:

கற்புடைய சீதை
நல்குணங்கள் அணிகலனாக அணிந்த சீதை
சத்தியம் தவறாத சீதை
அறம் தீண்டாத அரக்ககள்
தீண்டும் முன்னே இறந்தாள்” என்று
மனம் தேறி
திரும்பிப் போனால்
அது என்ன வீரமா?

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment