காலை வண்டிப் பயணம்
அறுபது கிலோ மிட்டரில்
ஆபீசுக்குப் பறக்கும்போதும்
பள்ளி செல்லும் பிள்ளைகளின்
கட்டி கட்டியான பவுடர் மாவும்
கருப்பு திருஷ்டிப் பொட்டும்
குதூகலிக்க வைக்கத் தவறுவதில்லை
அவர்கள் என்னைப் பார்த்து
கைகள் ஆட்டவில்லை
முகமும் நோக்கவில்லை
மகிழ்ச்சி இருபுறமும்
ஒரே நேரம் நிகழவில்லை என்பதைத் தவிர
பிரபஞ்சம் எப்போதும் எவருக்கேனும்
மகிழ்ச்சி ஊற்று
சுரந்து கொண்டேதான் உள்ளது.
No comments:
Post a Comment