Wednesday, 2 October 2013

மகிழ்ச்சி நிரந்தரம்



காலை வண்டிப் பயணம்
அறுபது கிலோ மிட்டரில்
ஆபீசுக்குப் பறக்கும்போதும்
பள்ளி செல்லும் பிள்ளைகளின்
கட்டி கட்டியான பவுடர் மாவும்
கருப்பு திருஷ்டிப் பொட்டும்
குதூகலிக்க வைக்கத் தவறுவதில்லை
அவர்கள் என்னைப் பார்த்து
கைகள் ஆட்டவில்லை
முகமும் நோக்கவில்லை
மகிழ்ச்சி இருபுறமும்
ஒரே நேரம் நிகழவில்லை என்பதைத் தவிர
பிரபஞ்சம் எப்போதும் எவருக்கேனும்
மகிழ்ச்சி ஊற்று
சுரந்து கொண்டேதான் உள்ளது.

No comments:

Post a Comment