Saturday, 12 October 2013

குழந்தைக்கு கவுன் தைப்பவர்கள்


அந்த
நீல நிற மீன்கொத்திப்பறவை பார்க்கும் தூரத்தில்
காயப்போட்டுள்ளார்கள் அந்த கவுனை
சிற்பிகள்தான் மறு பிறவியெடுத்து
குழந்தைக்கு கவுன் தைப்பவர்கள் ஆகமுடியும்போல

அந்த ஆடையின் வடிவிலேயே
ஒரு
சின்னஞ்சிறு குழந்தையை
எப்படித்தான் செய்கின்றனரோ

அடுத்தமுறை நீங்கள் அறியலாம்
கிளிப் போட்டு
காய வைக்கும்போது
காற்றில்
மேலும் கீழும் பறப்பது
கவுனில் இல்லாத துணிவடிவக்குழந்தைகள் அல்ல
மாயக் குழந்தை ஒன்றின் வீசும் கைகள்!


-- ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை (16.10.2013)

No comments:

Post a Comment