Sunday, 20 October 2013

சுந்தர காண்டம் 526 - 550




பாடல்-526: 

இராமனின் திருவடி
செம்மை இதழ் தாமரை என ஒருசொல்லில்
எளிதாகக் கூறிட இயலாது
நாயகன் திருவடி குறித்து
திருத்தமாகக் கூறினால்
கடலில் விளையும் பவழமும்
குவளை மலரின் கருநிறம்  ஆகிவிடும்!
பாடல்-527:

அணிகலன்கள் அணிந்தவளே கேள்
இராமனின் ஒளி மிகுந்த விரல்
கடலில் விளையும் இளமை பவழக் கொடியல்ல
கற்பக மரங்களின்
செந்நிற அரும்பல்ல
உதய இளம் சூரியனின் கதிரொளி
ஓரளவு உவமையாகலாம்!

பாடல்-528:

இராமனின் திருவடி நகங்களுக்கு
சிறியவும் பெரிதுமான
மாசிலாத பத்து சந்திரன்களும் இணை அல்ல
ஒளிவீசும் வைரங்கள் இணையல்ல
அதனால் -  
திருவடி நகங்களுக்கு உவமை நான் அறியேன்

பாடல்-529:

இராமனின் திருவடிகளைப் புகழ்ந்து முடித்து விட இயலாது
அயோத்தியில் அவை நிலத்தில் படவேயில்லை
பின்பு
காட்டில் வருந்தின
திரிவிக்கிரம அவதாரத்தில் அந்தத் திருவடிகள்
எல்லா உலகங்களையும் பொருந்தின
அதன் சிறப்பை எப்படிக் கூறுவேன்!

பாடல்-530:

இராமனின் கணைக்காலுக்கு
உவமை ஏதுமில்லை
ஆதிசேஷன் எனும் பாம்புப் படுக்கையில் துயிலும்
திருமாலின் கணைக்கால்
ஓரளவு உவமையாகும்
கொல்லும் அம்புகள் தாங்கும் அம்பறாத்துணி
இராமனின் திருவடிக்கு ஒப்பல்ல.

பாடல்-531:
இராமனது தொடைகள்
அறம் போற்றும் பறவை அரசன் கருடனது
அழகு மிக்க பிடரிக்கு சமம்
பெரும் புகழ் மிகு மத யானைகளின் துதிக்கைகள் 
இராமனின்தொடைகளுக்கு நாம் சமமில்லை என வெட்கப்படும்
உலகில் வேறெதுவும் உவமை உள்ளதா!

பாடல்-532:

தாமரை மலர் மட்டுமல்ல
எல்லா உலகங்களும் திரண்டு உண்டான
அழகிய கொப்பூழுக்கு எதை உவமையாக்குவது!
சுழித்துப் பெருகும் கங்கை ஆற்றின்
அழகிய நீர்ச்சுழ்¢ உவமை அல்ல அது இழிவே ஆகும்
மகிழம்பூ என்பதும் இணையல்ல
அழகுக்கு உவமை எங்கு தேடுவது?

பாடல்-533:

என் தெய்வமான சீதையே
ஒப்பற்ற அழகு பெற்ற ஒப்பற்ற உயர்வு பெற்ற
மரகத மலை போன்றது
இராமனது மலை போன்ற மார்பு.
அந்த்ச் மார்பினை அடையும் சிறப்பு பெற்றவர்
தவம் செய்த திருமகளை விட வேறு யார்?

பாடல்-534:

இராமனது முழங்கால்
இதழ்கள் நெருங்கிய தாமரை மலர் என
எண்ணிய வண்டுகள் மொய்க்கும் நீங்காத அழகுடையது
இராமனது பெரிய கைகள்
முழங்கால் அளவு நீண்டிருப்பது
ஐராவதம் எனும் திசை யானையின் துதிக்கை
ஒத்திருக்கும் முழங்கால்கள்  என ஓரளவு சொல்லலாம்
வேறு உவமை என்ன சொல்ல?

பாடல்-535:

பசும் இலைகள் கொண்ட தாமரை அரும்பு
சூரியனைக் கண்டு மலர்ந்தது போல உள்ளது
இராமனின் கரங்கள் 
இப்படியான மென்மையான கரங்கள்
இரண்யனின் வச்சிரம் போன்ற உடலை
பிளந்தது உண்மையா என சந்தேகப்படுபவர்
இராமனின் கை நகங்களைக் பார்க்கட்டும்

பாடல்-536:
சீதை தெய்வமே
இராமனின் தோள்களை
மலைகளுக்கு உவமை கூறுவதா? இயலாது!
மலைகளுக்கு இராமனது திரட்சி இல்லை
இராமனது ஒளி இல்லை
வெற்றித் திருமகளோடு சேர்ப்பு இல்லை
மாமேரு எனும் வில் ஒடியும்படி
வலிமையான நாண் புரளவில்லை புகழில்லை
ஒன்றைப் போல் இரண்டில்லை

பாடல்-537:

கடலில் விளையும் சங்கும்
பாக்கு மரமும்
இராமனின்  கழுத்துக்கு உவமை என
சிற்றறிவினர் கூறுவதை ஏற்க முடியாது
ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட
திருமாலின் இடக்கரம் உள்ள
பாஞ்ச சன்யம் இராமனின் கழுத்துக்கு உவமை.

பாடல்-538:

அண்ணலின் திருமுகம் தாமரை என்று கூறினால்
கண்ணுக்கு உவமை எதனைக் கூறுவேன்?
குளிர்சந்திரன் என்று உரைப்பேனா?
சந்திரனோ
விண்ணில் உடல் பொலிந்து
பிறகு மெலிந்து தேய்வானே!

பாடல்-539:
சந்தனக்குழம்பும் அகிலும் கலந்து பூசிய
அகன்ற தோள் அமலன் இராமன்
அவனது செவ்வாய் தாமரைக்கு ஒப்பிடப்பட்டால்
இராமனது இனிய சொற்களை
பவழம் பேசுமா? வெண் புன்னகையும் வீசாதே!
எனவே
பவழம் திருவாய்க்கு உவமை ஆகாது

பாடல்-540:

இராமனின் பற்கள்
முத்துக்களோ
முழுநிலவின் சிறு சிறு துண்டுகளோ
வெண் நிற தேவாமிர்தத் துள்¢களோ
அற வித்துகளின் முனைகளோ
சத்தியமரத்தின் உடும்புகளோ
முல்லையரும்போ
மயிலிறகின் அடிக்குருத்தோ
புன்னை மொட்டோ
எதனை நான் சொல்வேன் அம்மா.

பாடல்-541:

இராமனது மூக்கிற்கு
நாங்களே உவமையாகிறோம் என
இந்திர நீலக்கல்லின் ஒளிக்கொழுந்து வேண்டுகிறது
மரகதமணியின் ஒளித்திரட்சி வேண்டுகிறது
உவமையாக இருக்க முடியவில்லை!
இந்திரகோவம் எனும் பூச்சியை
கவ்விப் பிடிக்கும் பச்சோந்தியும்
அம்மூக்கிற்கு இணை அல்ல!

பாடல்-542:
தண்டகாரண்யத்தில்\
கரன் முதலிய அரக்கர் நடுங்க
இராமன் கையிலுள்ள வில்லினை விட்டதும்
அரக்கர்களது உடல்கள் தலை இழந்தன
உண்ண வந்த பேய்கள் கூத்தாடின
வானவரும் முனிவர்களும் அறக்கடலும் கூத்தாடின
நான்கு வேதங்களும் கூத்தாடின
இந்த பெருமையெல்லாம் இராமனது புருவத்திற்கு
சரியான உவமையா என நீயே அறிக!

பாடல்-543:

இராமனின் நெற்றியை
நிலவுடன் எப்போது ஒப்புமை செய்யலாம்?
வளர்ந்து வளர்ந்து தேய்தல் இல்லாவிட்டால்!
ராகு எனும் பாம்பினால் கவ்வுதல் இல்லாவிட்டால்!
தினசரி  பிறத்தல் இறத்தல் இல்லாவிட்டால்!~
அசையும் இருளில்
நிலவு அசையாமல் பலகாலம் நின்றால்!

பாடல்-544:

இராமனது திருமுடி மயிரினை
மழையெனக் கூற இயலாது ஏன்?
நீட்சி பெற்று திரண்டு
பளபளப்பாக
கருத்து ஒழுங்குடன்
நீலமணி நிறம் பெற்று
முறுக்காகப் பின்புறம் தாழ்ந்து
நுனி சுருண்டு
சந்தனம், துகில் முதலிய எந்த வாசனையும் இல்லாமல்
நறுமண மலர்கள் இல்லாமல்
இயற்கை மணம் வீசும் இராமனின் திருமுடி
இப்போது திரண்ட சடையாகி விட்டதம்மா! அதனால்
மழை என்பது பிழை!

பாடல்-545:

இராமனின் நடை
காளை நடை என்றால்
யானை வருந்தாதோ?
தன்னை அடைய
நிலமகள் திருமகள் இருவரும் வர
எல்லையிலா செல்வம் தர
அதனை மறுத்து
காட்டில் வாழும் நாளிலும்
தன் நிலை மாறாத பண்பு
யானையிடம் உள்ளதெனில் வருந்தாதோ?

பாடல்-546:

இவ்வாறு
அனுமன் மொழிய மொழிய
தீயிலிட்ட மெழுகு என
தன்னை அறியாமல் தளர்ந்தாள் சீதை
அவனைத்
தரையில் வீழ்ந்துவணங்கினாள் உடனே அனுமன்
“நாயகனார் சொன்ன அடையாளச் சொல் ஒன்று உண்டு
இராமன் கூறிய குறிப்புகள் உண்டு
அன்னநடையாளே கேள்” எனகூறத் தொடங்குவான்.

பாடல்-547:

“காட்டில் நடப்பது சிரமம்
காட்டில் நான் தங்கும் நாள்களும் சில
அதுவரை
என் தாய்களுக்கு பணி செய்து அயோத்தியிலேயே இரு”
எனக் கூறியதை கூறுக
ஆனால் அதற்கு முன்பாகவே அவள்
உடுத்த மர உரியோடும் என் மீது சினத்தோடும்
சீதை என் அருகில் நின்றாள் - அதை உரைக்கவும்”
என்றான் இராமன்”

பாடல்-548:

நீண்ட மகுடம் கொண்ட தசரதன்
ஆணையிட்டு அரசாட்சி ஏற்றேன்
பிறகு இழந்தேன் - 
காட்டுக்குப் புறப்பட்டேன்
மதில் கொண்ட கோட்டை வாசல் கடப்பதற்கு முன்
சீதை கேட்ட கேள்வி
“காடு எங்கே இருக்கிறது?புறப்படலாமா?”
இதைச் நினைவூட்டு என்றார் இராமபிரான்.

பாடல்-549:

குழந்தை குணம் கொண்ட சீதை
தேர் செலுத்தும்
சுமந்திரனை நோக்கி
“வள்ளல் இராமனின் ஆறுதல் சொற்களில்
கிள்ளை சீதை மனத்துயர் மறந்தாள் என்க
கிளிகளையும் நாகணவாய்ப்பறவைகளையும்
இனி எனக்குப் பதிலாக
ஊர்மிளை வளர்க்கச் சொல்க”
இதை நினைவு செய்க என்றான் இராமன்.

பாடல்-550:

இதற்குப் பிறகும் உணர்த்த ஏதுமில்லை
என்ற இராமபிரான்
“எனது பெய்யர் பொறித்த
அரிய கலை கொண்ட மோதிரம் இது
நீட்டு” என்று
தனது நெடிய கையால் தந்த
கணையாழி இது” என அனுமன் தர
வாள் நுதலி சீதை கண்டாள்.

--அனுமனோடு மீட்போம்.

No comments:

Post a Comment