அன்றாடம்
கடமைகள் புரியவேண்டும் என்பது
அனைவரும் அறிவோம்
“கடன்+ மை” என்பதே கடமையாகிறது
என்னென்ன கடன்கள் தீர்க்க வேண்டும்?
நான்கு என்றான் நமது மகாகவி:-
1.தன்னைக்கட்டுதல்
2.பிறர் துயர் தீர்த்தல்
3.பிறர் நலம் வேண்டுதல்
4. உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இதனால் என்ன பயன்கள் கிடைக்கும்
அதையும் எழுதினார் மகாகவி:
தன்னைக் கட்டுதலால் “அறம்” தோன்றும்.
பிறர் துயர் தீர்ப்பதால் “பொருள்” பெறலாம்
பிறர் நலம் வேண்டலால் “இன்பம்” வரும்
உலகு காக்கும் சக்தி போற்றலால் “வீடு பேறு” வாய்க்கும்
மகாகவி பாரதி வகுத்த பாதை-
11.9.2013ல் நினைவு நாளில்
புதுப்பித்துக் கொள்வோமா சிந்தையில்?
No comments:
Post a Comment