வேப்பமரக்கிளைகளை
அடர்த்தி அதிகமாகியதற்காக
மின்சாரக் கம்பியில் மோதாமல் தடுக்க
ஆள் வைத்து அரிவாளால் வெட்டும்போது
அதிலிருந்து இறந்து போய்விட்ட
ஒற்றை தவிட்டுக்குருவிக்குஞ்சுக்காக
மனம் வருந்துகிறான் மகன்
இறப்பு தாங்கமுடியாதுதான்
ஆனால் ஒன்று
மீதம் இரண்டு குஞ்சுகள் கூட்டில்
உயிருடன் இருப்பதோ...
அதன் தாய் உயிருடன் இருப்பதோ
மற்ற மற்ற குருவிக்கூட்டங்கள்
உயிருடன் பறப்பதோ
அதன் ஒலிக்கூட்டம் கேட்பதோ
நமக்குள் பதிவதில்லை
எது கண்முன் இறந்ததோ
அதன் பதிவு உலுக்குகிறது நம்மை
மகனுக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் சொல்லிவைத்தார் திருவள்ளுவர்
“இந்த உயிருக்கு நிரந்தரமான
தங்கும் கூடு இல்லை என்றுதான்
பறந்துவிடுகிறது”
No comments:
Post a Comment