பாடல்-376:
“மங்கையரின் மங்கலத்தாலிகள்
பிறர் அறுக்காமல்
தாமே அறுந்து அவர்தம் கொங்கைகள் மீது வீழ்ந்தன
தீயசகுனங்கள் இவை மட்டுமா?
இன்னும் அதிசயம் கேள்..!”
பாடல்-377:
மயனின் மகள் மண்டோதரி
அவளே இராவணன் மனனவி
அவள் கூந்தல் அவிழ்ந்து பிரிய
அதில் விளக்கின் தீ பற்றிட
சுறு சுறு என எரிந்தது
இதுவே “இன்னல் வரும்” என்பதற்கு
தகுந்த காரணம் என்றாள் திரிசடை.
பாடல்-378:
“வேறொன்று கூறுவேன் கேள்” என்று
திரிசடை பேசத் தொடர்ந்தாள்:-
“இன்று இங்கே ஒரு கனவு கண்டேன்
வலிமையான இரண்டு ஆண்சிங்கங்கள்
மலையில் வாழும்
புலிக்கூட்டத்தை தமது
துணையாக்கி கூட்டி வருகின்றன”
பாடல்-379:
புலிக்கூட்டங்கள்
காட்டில் நுழைகின்றன
மதம் பிடித்த யானைகளைக் கொல்கின்றன
காட்டில் இருந்த மயில் -
புறப்பட்டது
சிங்கங்களின் நகரம் நோக்கி!
பாடல்-380:
மென் சொல் சீதையே இதுவும் கேள்
ஆயிரம் திருவிளக்குகளின் அழகு ஒளி உடைய
பெரிய விளக்கை ஏந்திய திருமகள்
இராவணன் அரண்மனை நீங்கிவிடுகிறாள்
விபீடணன் அரண்மனை அடைகிறாள்.
பாடல்-381:
“திருமகள்
விபீடணன் அரண்மனையுள்
புகுந்த நேரத்தில் எழுப்பிவிட்டாய்
முற்றுப்பெறவில்லை அக்கனவு!”
திரிசடை சொன்னதும்
“அக்கனவின் மீதி சொல்ல
இன்னமும் துயில்க”
என இரு கை கூப்பினாள் சீதை.
பாடல்-382:
இந்த நேரத்தில் அண்ணல் இராமன் ஏவி
கொடிய காளை போன்ற
போர் வீரனும் தூதனும் ஆகிய அனுமன் அங்கு வந்தான்
மெல்லிடை சீதை இருக்கை நோக்கினான்.
பாடல்-383:
அதே நேரத்தில்
சீதை சுற்றியிருந்த அரக்கியர்கள்
தூக்கம் தெளிந்தனர்
“நன்மை ஏதும் தராத இந்தத் தூக்கம்
கெடுத்து விட்டதே..” என எல்லாப்பக்கமும் எழுந்து நின்றனர்
வேல்-
மழு-
வளைந்த தடி-
சூலத்துடன்!
பாடல்-384:
அந்த அரக்கிகளுக்கு -
வாய் -
முகத்தில் இல்லை! வயிற்றில் இருந்தது
கண்கள்-
நெற்றிப்பரப்பில் இருந்தன
யானைகளும் யாளிகளும் பேய்களும்
உறங்குகின்ற மலைக்குகை போன்ற
ஆழமான வாய் இருந்தது!
பாடல்-385:
பத்து கைகள்!
இருபது தலைகள்!
இரண்டே கைகள்!
அஞ்சும் தோற்றம்
பார்த்தால் சிரிப்பு வரும் வேஷத்தில் இருப்பர்
பெருமலை போல -
பல முலைகள் கொண்டவர்கள்.
பாடல்-386:
அந்த அரக்கிகள்
சூலம் - வாள்- சக்கரம்
அங்குசம் - இரும்பு உலக்கை
எமன் போன்ற வேல் -
கப்பணம்
ஆகிய கருவிகள் பயின்றவர்கள்
கறுப்பு மேனி -
நஞ்சு மாறுவேடம் இட்டது போன்ற
தோற்றத்தில் இருக்கும்
மழுவேந்திய சிவபெருமானுக்கும்
சவால் விடும் தன்மையர்!
பாடல்-387:
அந்த அரக்கிகளுக்கு
முதுகில் தான் முகமே இருக்கும்!
யானை - குதிரை - புலி - கரடி
யாளி - பேய் - சிங்கம்
இவையே அந்த முகங்கள்!
மூன்று கண்கள்
புகை எழும் வாய்!
தீமை தரும் தொழில்!
பாடல்-388:
அந்த அரக்கிகளின் மனதில்
அளவிட முடியாத வலிமை!
கண்களால் -
அளவிட முடியாத தோற்றம்!
பெண்கள் எனும் பெயரில் உலவும் எமன்கள்!
பாடல்-389:
அழகன் தேவியாம் சீதை
வார்த்தை வராமல் அவிந்து
தீப் போன்ற அரக்கியர்கள்
முகம் பார்த்து வாடியதை கண்டான் அனுமன்
ஓய்வெடுக்க முடியாமல்
உயர்ந்த மரக்கிளையில் காத்திருந்தான்!
பாடல்-390:
இருப்பதோ பலப்பல அரக்கியர்கள்
கையில்லாத வேல்கள்
கூட்டம் கூடியிருக்கிறார்கள்
நெருங்கி இருக்கிறார்கள்
தூக்கம் கலைந்து தெளிந்து விட்டார்கள்
என்ன காரணம் என
அவர்கள் நடுவே நோக்கினான்
உச்சி மரத்தின் மீதிருந்த அனுமன்.
பாடல்-391:
இராமனின் நிறம் -
தனிப்பட்டது!
ஒப்பற்ற கருமேகத்தின் நிறம்
அப்படிப்பட்ட கருமேக நிற இராமனுடன்
அவனுக்கென்றே உருவான சீதையை
கண்டு தரிசித்த அனுமனின் கண்கள்
இன்று -
கருமேகக்கூட்டம் போன்ற அரக்கிகள் நடுவே
ஒளிவிடும் மின்னல் போன்ற சீதையைக் காண்கின்றன.
பாடல்-392:
ஆனால் இவள் சீதை தானா என்ற ஐயம்!
சீதையாகத்தான் இருக்கவேண்டும்,
ஏனெனில் இவள் -
கடக்க இயலாத அரக்கியர்களின்
காவல் சுற்று வடத்தில் உள்ளாள் இவள் சீதைதான்
சீதையே தான்
கடல் துணை கொண்ட நெடிய கண்கள்
அக்கண்களில் கண்ணீர் குளம்
அதன் அன்னப்பறவை இவள் ... !
பாடல்-393:
அவ்வளவு தான்!
அடுத்த கணம் உற்சாகங்கள் உண்டவனாகி
ஆடினான் பாடினான்
அங்கும் இங்கும் ஓடினான்
“அறம் அழியவில்லை
நானும் இனி இறக்கமாட்டேன்
தேடிய சீதை கண்டுவிட்டேன்
இவள் சீதைதான்” என்று கூத்தாடினான்.
பாடல்-394:
மகிழ்ச்சி மிக்க பெரும் உற்சாக வெள்ளம்
அலை புரண்டடிக்க
தனக்குள் அனுமன் பலவும் கூறிக்கொண்டான்
“கமலக்கண் இராமபிரான் வருணித்த
அரும் உருவினாள் சீதையின்
அனைத்து இலக்கணங்களும் பொருந்துகின்றன
கள்ளம் மிக்க வாள் அரக்கன் இராவணன்
இராமனின் உடலில் உறையும் உயிராம் சீதையை
ஒளித்து வைத்தது வியப்புதான்!”
பாடல்-395:
இராமபிரான் வேறு யாருமல்ல
பாம்பணை நீங்கிய திருமாலே!
சீதாப்பிராட்டி வேறு யாருமல்ல-
செந்தாமரைச் செல்வியாம் லஷ்மியே!
இராவணன் செய்த பிழை வேறல்ல -
தன் உயிரை இராமபிரான் வழியே
களைந்து கொள்ளும் ஏற்பாடே!.
பாடல்-396:
அழுக்கேறிய கூந்தலுடன்
சீதை கண்டதும்
அனுமன் மனம் அழுதது இவள் இப்போது
மாசு படிந்த மாணிக்கம்
சூரியக்கதிர்களால் ஒளியிழந்த நிலவு
எனினும்
கற்பின் திண்மைக்கு பழியில்லை
தன்னையே காக்கும் காவலுக்கும் பழியில்லை
ஆம்! அறம் அழிவதில்லை!
பாடல்-397:
இப்போது எனக்குள் சீதையைப் புகழும் சொற்கள் ஊறுகின்றன
எவரைப் பாராட்டுவேன்
எதனைப் பாராட்டுவேன்
வீரக்கழல் அணிந்த இராமபிரான் தோள்களையா!
மங்கையர் திலகமாம் சீதை உள்ளத்தையா!
கொடை குணம் மிக்க ஜனகனின் குலத்தையா!
பாடல்-398:
அனுமனாம் எனக்குள் பலகுரல்கள் கேட்கின்றன
அதை உமக்குக் கூறுகிறேன்
“தேவர்கள் பிழை செய்யவில்லை என்று தெரிகிறது
வேதியர்களும் அப்படித்தான்
அறமும் அழியவில்லை
இனி என் இராமனால் எல்லாம் முடியும்
என் அடிமைத் தன்மையும் பிழையற்றது”
பாடல்-399:
ஒப்பிலாத சீதையின் நிறையாம் கற்பு நிலை
சிறிதளவு குலைந்தாலும்
ஆழியான் இராமபிரான் சினத்தால்
ஊழியாம் அழிவு வரும் என நினைத்தேன்
எல்லையில்லா நாட்கள் வாழட்டும் உலகம்!
பாடல்-400:
நற்குலப்பெண்களின்
மன உறுதி என்பதே தவமாகும்
சொல்லுக்கு அடங்காத சிறப்பாகும்
நெருப்பில் நின்றும்
நீரில் மூழ்கியும்
உண்பதும் அருந்துவதும் நீக்கியும்
நோன்பு செய்வோரைக்கூட ஒப்பிட இயலாது!
--அனுமனோடு மீட்போம்.
“மங்கையரின் மங்கலத்தாலிகள்
பிறர் அறுக்காமல்
தாமே அறுந்து அவர்தம் கொங்கைகள் மீது வீழ்ந்தன
தீயசகுனங்கள் இவை மட்டுமா?
இன்னும் அதிசயம் கேள்..!”
பாடல்-377:
மயனின் மகள் மண்டோதரி
அவளே இராவணன் மனனவி
அவள் கூந்தல் அவிழ்ந்து பிரிய
அதில் விளக்கின் தீ பற்றிட
சுறு சுறு என எரிந்தது
இதுவே “இன்னல் வரும்” என்பதற்கு
தகுந்த காரணம் என்றாள் திரிசடை.
பாடல்-378:
“வேறொன்று கூறுவேன் கேள்” என்று
திரிசடை பேசத் தொடர்ந்தாள்:-
“இன்று இங்கே ஒரு கனவு கண்டேன்
வலிமையான இரண்டு ஆண்சிங்கங்கள்
மலையில் வாழும்
புலிக்கூட்டத்தை தமது
துணையாக்கி கூட்டி வருகின்றன”
பாடல்-379:
புலிக்கூட்டங்கள்
காட்டில் நுழைகின்றன
மதம் பிடித்த யானைகளைக் கொல்கின்றன
காட்டில் இருந்த மயில் -
புறப்பட்டது
சிங்கங்களின் நகரம் நோக்கி!
பாடல்-380:
மென் சொல் சீதையே இதுவும் கேள்
ஆயிரம் திருவிளக்குகளின் அழகு ஒளி உடைய
பெரிய விளக்கை ஏந்திய திருமகள்
இராவணன் அரண்மனை நீங்கிவிடுகிறாள்
விபீடணன் அரண்மனை அடைகிறாள்.
பாடல்-381:
“திருமகள்
விபீடணன் அரண்மனையுள்
புகுந்த நேரத்தில் எழுப்பிவிட்டாய்
முற்றுப்பெறவில்லை அக்கனவு!”
திரிசடை சொன்னதும்
“அக்கனவின் மீதி சொல்ல
இன்னமும் துயில்க”
என இரு கை கூப்பினாள் சீதை.
பாடல்-382:
இந்த நேரத்தில் அண்ணல் இராமன் ஏவி
கொடிய காளை போன்ற
போர் வீரனும் தூதனும் ஆகிய அனுமன் அங்கு வந்தான்
மெல்லிடை சீதை இருக்கை நோக்கினான்.
பாடல்-383:
அதே நேரத்தில்
சீதை சுற்றியிருந்த அரக்கியர்கள்
தூக்கம் தெளிந்தனர்
“நன்மை ஏதும் தராத இந்தத் தூக்கம்
கெடுத்து விட்டதே..” என எல்லாப்பக்கமும் எழுந்து நின்றனர்
வேல்-
மழு-
வளைந்த தடி-
சூலத்துடன்!
பாடல்-384:
அந்த அரக்கிகளுக்கு -
வாய் -
முகத்தில் இல்லை! வயிற்றில் இருந்தது
கண்கள்-
நெற்றிப்பரப்பில் இருந்தன
யானைகளும் யாளிகளும் பேய்களும்
உறங்குகின்ற மலைக்குகை போன்ற
ஆழமான வாய் இருந்தது!
பாடல்-385:
பத்து கைகள்!
இருபது தலைகள்!
இரண்டே கைகள்!
அஞ்சும் தோற்றம்
பார்த்தால் சிரிப்பு வரும் வேஷத்தில் இருப்பர்
பெருமலை போல -
பல முலைகள் கொண்டவர்கள்.
பாடல்-386:
அந்த அரக்கிகள்
சூலம் - வாள்- சக்கரம்
அங்குசம் - இரும்பு உலக்கை
எமன் போன்ற வேல் -
கப்பணம்
ஆகிய கருவிகள் பயின்றவர்கள்
கறுப்பு மேனி -
நஞ்சு மாறுவேடம் இட்டது போன்ற
தோற்றத்தில் இருக்கும்
மழுவேந்திய சிவபெருமானுக்கும்
சவால் விடும் தன்மையர்!
பாடல்-387:
அந்த அரக்கிகளுக்கு
முதுகில் தான் முகமே இருக்கும்!
யானை - குதிரை - புலி - கரடி
யாளி - பேய் - சிங்கம்
இவையே அந்த முகங்கள்!
மூன்று கண்கள்
புகை எழும் வாய்!
தீமை தரும் தொழில்!
பாடல்-388:
அந்த அரக்கிகளின் மனதில்
அளவிட முடியாத வலிமை!
கண்களால் -
அளவிட முடியாத தோற்றம்!
பெண்கள் எனும் பெயரில் உலவும் எமன்கள்!
பாடல்-389:
அழகன் தேவியாம் சீதை
வார்த்தை வராமல் அவிந்து
தீப் போன்ற அரக்கியர்கள்
முகம் பார்த்து வாடியதை கண்டான் அனுமன்
ஓய்வெடுக்க முடியாமல்
உயர்ந்த மரக்கிளையில் காத்திருந்தான்!
பாடல்-390:
இருப்பதோ பலப்பல அரக்கியர்கள்
கையில்லாத வேல்கள்
கூட்டம் கூடியிருக்கிறார்கள்
நெருங்கி இருக்கிறார்கள்
தூக்கம் கலைந்து தெளிந்து விட்டார்கள்
என்ன காரணம் என
அவர்கள் நடுவே நோக்கினான்
உச்சி மரத்தின் மீதிருந்த அனுமன்.
பாடல்-391:
இராமனின் நிறம் -
தனிப்பட்டது!
ஒப்பற்ற கருமேகத்தின் நிறம்
அப்படிப்பட்ட கருமேக நிற இராமனுடன்
அவனுக்கென்றே உருவான சீதையை
கண்டு தரிசித்த அனுமனின் கண்கள்
இன்று -
கருமேகக்கூட்டம் போன்ற அரக்கிகள் நடுவே
ஒளிவிடும் மின்னல் போன்ற சீதையைக் காண்கின்றன.
பாடல்-392:
ஆனால் இவள் சீதை தானா என்ற ஐயம்!
சீதையாகத்தான் இருக்கவேண்டும்,
ஏனெனில் இவள் -
கடக்க இயலாத அரக்கியர்களின்
காவல் சுற்று வடத்தில் உள்ளாள் இவள் சீதைதான்
சீதையே தான்
கடல் துணை கொண்ட நெடிய கண்கள்
அக்கண்களில் கண்ணீர் குளம்
அதன் அன்னப்பறவை இவள் ... !
பாடல்-393:
அவ்வளவு தான்!
அடுத்த கணம் உற்சாகங்கள் உண்டவனாகி
ஆடினான் பாடினான்
அங்கும் இங்கும் ஓடினான்
“அறம் அழியவில்லை
நானும் இனி இறக்கமாட்டேன்
தேடிய சீதை கண்டுவிட்டேன்
இவள் சீதைதான்” என்று கூத்தாடினான்.
பாடல்-394:
மகிழ்ச்சி மிக்க பெரும் உற்சாக வெள்ளம்
அலை புரண்டடிக்க
தனக்குள் அனுமன் பலவும் கூறிக்கொண்டான்
“கமலக்கண் இராமபிரான் வருணித்த
அரும் உருவினாள் சீதையின்
அனைத்து இலக்கணங்களும் பொருந்துகின்றன
கள்ளம் மிக்க வாள் அரக்கன் இராவணன்
இராமனின் உடலில் உறையும் உயிராம் சீதையை
ஒளித்து வைத்தது வியப்புதான்!”
பாடல்-395:
இராமபிரான் வேறு யாருமல்ல
பாம்பணை நீங்கிய திருமாலே!
சீதாப்பிராட்டி வேறு யாருமல்ல-
செந்தாமரைச் செல்வியாம் லஷ்மியே!
இராவணன் செய்த பிழை வேறல்ல -
தன் உயிரை இராமபிரான் வழியே
களைந்து கொள்ளும் ஏற்பாடே!.
பாடல்-396:
அழுக்கேறிய கூந்தலுடன்
சீதை கண்டதும்
அனுமன் மனம் அழுதது இவள் இப்போது
மாசு படிந்த மாணிக்கம்
சூரியக்கதிர்களால் ஒளியிழந்த நிலவு
எனினும்
கற்பின் திண்மைக்கு பழியில்லை
தன்னையே காக்கும் காவலுக்கும் பழியில்லை
ஆம்! அறம் அழிவதில்லை!
பாடல்-397:
இப்போது எனக்குள் சீதையைப் புகழும் சொற்கள் ஊறுகின்றன
எவரைப் பாராட்டுவேன்
எதனைப் பாராட்டுவேன்
வீரக்கழல் அணிந்த இராமபிரான் தோள்களையா!
மங்கையர் திலகமாம் சீதை உள்ளத்தையா!
கொடை குணம் மிக்க ஜனகனின் குலத்தையா!
பாடல்-398:
அனுமனாம் எனக்குள் பலகுரல்கள் கேட்கின்றன
அதை உமக்குக் கூறுகிறேன்
“தேவர்கள் பிழை செய்யவில்லை என்று தெரிகிறது
வேதியர்களும் அப்படித்தான்
அறமும் அழியவில்லை
இனி என் இராமனால் எல்லாம் முடியும்
என் அடிமைத் தன்மையும் பிழையற்றது”
பாடல்-399:
ஒப்பிலாத சீதையின் நிறையாம் கற்பு நிலை
சிறிதளவு குலைந்தாலும்
ஆழியான் இராமபிரான் சினத்தால்
ஊழியாம் அழிவு வரும் என நினைத்தேன்
எல்லையில்லா நாட்கள் வாழட்டும் உலகம்!
பாடல்-400:
நற்குலப்பெண்களின்
மன உறுதி என்பதே தவமாகும்
சொல்லுக்கு அடங்காத சிறப்பாகும்
நெருப்பில் நின்றும்
நீரில் மூழ்கியும்
உண்பதும் அருந்துவதும் நீக்கியும்
நோன்பு செய்வோரைக்கூட ஒப்பிட இயலாது!
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment