Wednesday 21 August 2013

நண்டு தியானம்

வட்டக்கிணறு போன்ற இரும்புத் தொட்டியில்
ஆயிரம் நண்டுகள் கொட்டப்பட்டு இருந்தன
மேல்புறமாக
சூரிய ஒளியில் புறா ஒன்று பறந்ததும்
நண்டுக்குப் புரிகிறது வானம் பற்றிய விவரங்கள்
ஏக்கத்தோடு கூறியது;
“என்னை தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது நண்டுகள்
பிடித்து இழுப்பதால் பறக்கும்வாழ்வை இழந்தேன்”
“அதல்ல நண்பா.. நீ பிடித்து இழுக்கும் நண்டுகளையே
எண்ணுவதில் காலம் போக்கினாய்
இன்றுமுதல் வானம் பற்றி தியானம் செய்”

1 comment:

  1. அருமை ......
    பறக்கிறது என் மனஸு....
    -நளினிசாஸ்திரி

    ReplyDelete