எவ்வளவு அதிர்ஷ்ட்டம் உனக்கு
நீ வைத்திருந்தாய் அபூர்வஜாதிப்பறவை ஒன்று
ஆசையாக வளர்த்து முடித்தாய்
என்ன ஒரு துரதிருஷ்டம்
உன் பறவை பறக்கவேயில்லை
சிறகை விரிக்கவில்லை வானம் அறியவில்லை
உன் பறவை என்பதால் குறை என்பது நிறை ஆகுமா
கேட்டவர்களிடம் வருத்தமாய் சொன்னாய்
சிலர் பற பற என்று பாடம் எடுத்தனர் பறவைக்கு
சிலர் சிறகுக்கு எண்ணெய் தடவியும் பலனில்லை
துறவி ஒருவர் வந்தார்
ஏணி போட்டு தூக்கிக்கொண்டு உன் பறவையை
உச்சி மரக்கிளையில் அமர வைத்து
மரக்கிளையை எதிர்பாராமல் வெட்டிவிட்டார்
பயந்து விழும் பயணம் ஆரம்பிக்க
இடமும் வலமும் தவித்துப் புரண்டு
நிலை சரி செய்ய இப்போது
தானே பறக்கிறது உன் பறவை
நிலை தடுமாறி
சிக்கல் வரும்போது தானே பறத்தல் சக்தி
என்று புத்தி புகட்டுகிறது உன் பறவை.
No comments:
Post a Comment