Wednesday, 21 August 2013

யானைப்புன்னகை

காடுகளில் காணவேண்டிய கம்பீர யானை
இடுக்குகளில்  வளர்வது கண்டேன்
நீ யானைதான் எனப் பல முறை கூறும்போதெல்லாம்
இன்னும் சில சிறிய சந்துகளைக் கண்டுபிடித்தேன் என
புன்னகை புரிகிறது
சகிக்க முடியாத புன்னகை அது
தன்பலம் அறியும் யானை ஒருநாள் என்பதால் அதற்கு
சிநேகிதமான புன்னகையே வீசுவேன்.

No comments:

Post a Comment