சொல்லத் தகுமோ
நடுவிலிருப்பவர்கள் வாங்கும் சொல்லம்புகளும் அடிகளும்
“இவன் செய்தது சரி”
என அவனிடம் சொல்லமுடியாமலும்
“அவன் செய்ததும் சரி” என
இவனிடம் சொல்ல முடியாமலும் நின்று
இரு பக்கமுள்ள புழுக்கச் சொற்களும் ஏச்சும்
கேட்டு கேட்டு
செவிக்குள் குண்டலம்
ஒரு மண்டலமாக விரிந்து ஆட ஆட
அதில் தப்பிக்க
இரு கால்களால் ஓட முடியாமல்
ஒரு கால் தூக்கி ஆடி
தப்பிக்கும் முயற்சியில்
நடராஜன் ஆகுதல் தான் எல்லையோ ஐயா.
No comments:
Post a Comment