Friday, 16 August 2013

ஈசல் ஞானம்

ஒரு நாள் எனினும்
உயர வழி தேடு!
உயிர் போகும் எனினும்
மறு நாள் வரை பற!
இறந்த ஈசல் இறகுகள்
காலை ஈரத்தில்
பெருக்கித் தள்ளப்படும்போது
பறந்து பறந்து சொல்லுகின்றன என்னிடம்.

No comments:

Post a Comment