Sunday, 18 August 2013

சில காரணங்கள்



சில காரணங்கள் புரிவதேயில்லை
சிலர் எடுத்துச்சொன்னாலும் சரி
பலர் சொல்லிவிட்டுப்போயிருந்தாலும் சரி
விளக்கவும் முடியவில்லை
விளங்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் இல்லை
காகங்களுக்கு வடை மட்டுமே ஏன் அதிகம் பிடிக்கிறது?
வயதும் நோயும் புரியும்போது அற உணர்வு ஏன் அதிகமாகிறது?
பெட்ரோல்விலை ஏறும்போது மட்டும் கோபமும்
பிறகு மறப்பும் ஏன் நிகழ்கிறது?
ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் மட்டும் கட்டாயம்
சில மணிநேர மூடு அவுட் ஏன் நிகழ்கிறது?
ஜீன்ஸ்கள் ..முன்னோர்கள்.. வினைப்பயன்கள் ..
எதை ஒத்துக்கொள்வது - 
வெய்யிலில் நடப்பவனுக்கு வெய்யில் பற்றி எதற்கு ஆராய்ச்சி
நடந்து போகணும் மெல்ல
வேறென்ன சொல்ல

No comments:

Post a Comment