Thursday, 15 August 2013

மங்கல இசைக் கலைஞன்

எத்தனை இனிய நாயன இன்னிசை ஆலாபனை
எத்தனை மேளவகைத் தொடர் ஆரோகணம்
எத்தனை சுருதி சேர்ப்பு ஜாலரா மெல்லிய சேர்ப்பு
அத்தனையும் யார் ரசித்தார் திருமண மண்டபத்தில்
அவரவர் பரபரப்பு இரைச்சலில் அலைகின்றனர்
எதையும் காணவில்லை நாயனக் கலைஞன்
மேளக்காரர் தலைரசிப்பு மட்டும்தான் தனக்கு எனும்
அவநம்பிக்கை கொள்ளவில்லை அவன்
தன் இசையில் தானே லயித்து
தன் படைப்பை தனக்கே சுத்தமுடன் ரசிப்புடன்
திருமண மண்டபக்காற்றில் மிதக்கவிடும் கலையாக  இரு
கலைஞனாக இரு
ஏ மனமே உனக்கிது கூறினேன்
நீ பாடு ஆனந்தமாய்
கேட்போர் உள்ளனர் வாழ்க்கை பரபரப்பு மண்டபத்தில்
சர்வ நிச்சயம்!

No comments:

Post a Comment