பாடல்-271:
“இராவணனின் தோள்களுக்குத்தான்
எத்தனை வலிமை!
மேருமலையை வில்லாக வளைத்து
சிவபெருமானின் கயிலை மலையை அசைத்தவை!
அப்படிப்பட்ட உயர்ந்த தோள்களில் பூசப்பட்ட சந்தனத்தை
தமது முலைகளால் கவர்ந்தோமே”
என்று நினைத்து இன்பம் அடைகிறார்கள்
சில இயக்க மங்கையர்கள்!
பாடல்-272:
உயர்ந்து எழும் நான்கு திசைக்கடல்கள்
ஒன்றாகக் கலந்து கோர்த்து
பெரு வெள்ளமாகும் பிரளயத்தில்
ஆடுகின்ற சிவனின் புகழை
தனது கை நரம்பினால்
பெரும் பண்களும் ஆசைப்படும்படி
பாடியது இராவணன் அன்றோ ! என புகழ் பாடுகின்றனர்
இயக்க மாதர்கள் சிலர்.
பாடல்-273:
இயக்க மாதர்கள் இப்படியாக இருந்த
பல்லாயிரம் வீடுகளைக் கடந்தான்
நீதிநெறி அனுமன்
பின்பு -
இராவணனின் குலம் சார்ந்த
அரசகுடும்ப அரக்கியர் வாழும்
இடத்தில் தேடப்புறப்பட்டான்.
பாடல்-274:
அரக்கியர் மாளிகைகள் -
சுவர்களில் பதிந்த மாணிக்கங்களால்
இருளிலும் ஒளி வீசின
அதனால் -
விளக்குகள்
தேவை இல்லை!
தோழியர் கூட்டம் நீங்கியதும்
அரக்கியர்கள் தனியே வாடினர்.
அவர்கள் மனங்களோ -
இராவணனோடு போய்விட்டது!
பாடல்-275:
அரக்கியர் சிலர்
கூந்தல் அழகு மிக்கவர்கள்
அக்கினிக் பிழம்பு மீது
கஸ்தூரிக்குழம்பு பூசியது போல இருப்பார்கள்
கூந்தல் மொய்க்கும் புகை
வண்டுகளுக்குச் சமம்!
மலர்ப்படுக்கை பகையாகி விட்டது
பளிங்குக்கல்லின் குளிர் மேடையில்
படுப்பினும்
காமம் தணியாமல் வளர
நெஞ்சு கொதிப்பானார்கள்.
பாடல்-276:
அரக்கியர் சிலர் -
மாலை நேர வானம் போல இருந்தார்கள்
எப்படி?
அவர்கள் ஒப்பற்ற உடம்பு -
பரப்பு மிக்க ஆகாயம்
அவர்கள் நெற்றி -
பிறைச்சந்திரன்!
அவர்களின் முத்து மாலை -
ஆகாய விண்மீன்கள்!
அவர்கள் இடை -
மின்னல் கொடி!
அவர்கள் திரண்ட கூந்தல் -
முருக்க மலரின் ஒளி கொண்ட செவ்வானம்!
மையுண்ட கண்கள் -
மேகம்!
பாடல்-277:
பிரிவுத்துயரை மறக்க
அரக்கியர் கண்ட இன்னொரு வழி இதுதான் :-
ஓங்கிய மாடம் ஏறினர்
எள்ளி நிலவொளி முற்றம் சென்றனர்
தோழியரும் வந்தனர்
நீலோற்பவ மலர் போன்ற கண்கள்
நிலவொளியால் நிறம் மாறின
சுருண்ட கூந்தல் மேகம் சரிய
வான நட்சத்திரம் கைகளால் பறித்து
அவற்றை கழற்சிக் காய்களாக எண்ணி
விளையாட முற்பட்டனர்!
பாடல்-278:
பிரிவுத்துயர் மறக்கச் செய்ய -
தேவமகளிரான பெண்டிர் கூட்டம் முயன்றது
ஆகாய கங்கை நீரைக் கொணர்ந்தனர்
அந்தக்குளிர்ச்சி போதவில்லை
கோபம் கொண்டனர் சிலர்
இரத்தினம் பதித்த மாடத்தில்
இடை தடுமாற ஏறிச் சென்று
மேகங்களை விரலால் கீறி
அதில் ஒழுகும் நீரில்
மஞ்சனம் ஆடினர்!
பாடல்-279:
இன்னும் சிலர் -
“பாம்பரசனின் செந்நிற மாணிக்கத்தை
இன்னுயிர்க் கணவன் இராவணன்
வலிதில் பறித்து
எனக்கு கொடுத்தான்
இது எனக்கு சூதாடும் காய்!” என்கின்றனர்.
பாடல்-280:
இன்னும் சிலர்
ஆடல் காணத் துவங்கினர்
யாருடைய ஆடல்?
பொன்மாளிகையில் முத்துப்பந்தல் கீழ்
அழகிய குடமுழாவின் தாளத்திற்கு
சித்த கன்னிகள் பாட
அழகிய தோள்கள் உடைய
அரம்பையர் ஆடுகின்றனர்!
பாடல்-281:
இன்னும் சிலருக்கு அழுகை!
ஆணி போன்று அறைந்த காதல்
அகம் சுட்டது
அருவி உண்டது போல் கண்கள் அழுகின்றன
````````````````````````````````````உறக்கம் தீர்ந்து``````விட்டது`
வீணையின் குரலும் அவர்கள் குரலும்
வேறு வேறு அல்ல எனுமளவில்
சிலர் பாடவும் செய்தனர்!
பாடல்-282:
சில அரக்கியர்கள் உண்டது -
உறைப்பான “கள்”!
அதனால் மயங்கிச் சுழன்றன
கண்கள்!
குரவை பாடினர்
கூத்தாடினர் ஆரவாரமுடன்!
அப்போது -
வாழை மரத்தின் அடித்தண்டு போன்ற
தொடைகளின் நடுவில் உள்ள
அல்குல் எனும் தட்டின் மீது
கட்டிய சேலைகள் தாழ்ந்தன
இடை அணிகளும் தாழ்ந்தன
அணிந்த குண்டலங்கள் ஒளி வீசின.
பாடல்-283:
இன்னும் சில அரக்கியர் -
பல வகைப் பிராணிகளின்
குருதி குடித்து மயங்கினர்
நாக நஞ்சு போன்ற கள் குடித்தனர் அதனால் -
“குச்சரி” எனும் பண் தன்மை
குரலில் கலந்து பைத்தியம் போல் பிதற்றினர்
“சச்சரி” எனும் தோல் கருவி போல
கைகள் தட்டினர்.
அல்குலின் மீது அணிந்த
மெல்லிய ஆடையையும் கிழித்துக் கொண்டனர்
“கலாபம்” எனும் இருபத்தைந்து இடை அணியும்
கிழித்துக் கொண்டனர்!
பாடல்-284:
சில அரக்கியர் -
தயிர் நிறம் கொண்ட கள் பருகினர்
மனம் தடுமாறினர்
அறிவு மயங்கினர்
ஆரவாரித்தனர்
“என் மேல் தெய்வம் வந்தது!” என்றுபெருமூச்சு விட்டனர்
இரண்டு கைகளையும் தலை மே உயர்த்தி சிலிர்த்து
உடல் கூசி
வாய் திறந்து கதறி ஓய்ந்தனர்.
பாடல்-285:
இப்படியாகப்பட்ட அரக்க மகளிர்
வரிசையாக வசித்த நான்கு கோடி வீடுகளிலும்
அனுமன் தேடிப்பார்த்தான் சீதையை!
கிட்டவில்லை!
சித்தர்களின் பெண்நிலையான
சித்தியர்கள் வாழும் தெருவும் கடந்தான்
வித்தியாதர மகளிர் வீதிகள் அடைந்தான்.
பாடல்-286:
வித்தியாதர மகளிருக்கு
தன் கணவனாகிய இராவணன் மீது
நாளும் நாளும் வளரும் காதல்!
ஆனால் -
சுறாமீன் வடிவு பொறித்த
நீண்ட மகுடம் பூண்ட
இராவணன் வருதலோ நிகழவில்லை
அதனால் -
அவர்களது தளர்ந்த மனம்
அவர்களது இடையைக் காட்டிலும் அதிகம் துடித்தது!
ஆறுதல் தந்திட
எழுப்பிய இசையோ
நாகம் -
செவியில் நுழைந்தது போல துன்புறுத்தியது.
பாடல்-287:
“நன்னெறி முனிவர்களுக்கும் தேவர்களுக்கும்
சரண்புக இடமில்லாமல் துன்பம் செய்த
இராவணன் மீது அன்பு மிக்க
வித்தியாதர மகளிரை நாம்
பகைத்தே தீர வேண்டும்” என்று
முடிவெடுத்த குளிர் சந்திரன்
அரக்கியர் முலைகளை சுட்டெரிக்கிறான்
அதனால் சிலர் -
பூங்கொடிகள் போல வதங்கினர்.
பாடல்-288:
இராவணன் மீது கொண்ட காதலால்
வித்தியாதர மகளிர் சிலருக்கு
நிமிடம் , வினாடி முதலிய
சொற்ப காலங்கள் கூட
கற்ப காலங்களாக நீண்டன
முன்பு அவனைத் தழுவியதால்
முலையில் படிந்த சந்தனம்
கண்டு பெருமூச்சு விட்டார்கள்
முன்பு அவன் வரைந்த
“தொய்யில்” எனும் குறிகளும்
அவர்கள் உயிர் பிளந்து வருத்த
கண்கள் சிவந்தன!
பாடல் -289:
இப்படியாக -
வித்தியாதர மங்கையர் வாழும்
பனிரெண்டு கோடி மாளிகைகள் கொண்ட
நெடிய தெரு முழுதும் சீதையைத் தேடினான்
அடுத்து -
மூன்று உலக அதிபதியாம் இராவணனின்
பெரும் அரண்மனை நெருங்கினான்
அங்கே -
சந்திரன் தோற்கும் சுந்தரமுகம் கண்டான்
மயன்மகள் மண்டோதரி
வசிக்கும் மாளிகை கண்டான்!
பாடல்-290:
அனுமனுக்கு ஒரே பேரின்பம்!
“நமது தேடும் பணி நிறைவுற்றது
மற்ற மாளிகையில்
இல்லாத சிறப்பு இதற்கு உண்டு
அது எது?
இராமனின் உயிரை விடவும் சிறந்த சீதை
வசிக்கும் பெருமை அது!
எல்லா வீடுகளும் மணிகள் அதில் -
திருமால் மார்பில் உள்ள
“கெளத்துபம்” எனும் மணி போன்றது இம்மாளிகை!
பாடல்-291:
அந்த மாளிகையில் இருந்தது சீதையல்ல
மண்டோதரி!
அரம்பை மேனகை திலோத்தமை
ஊர்வசி முதலானவர்கள்
மலர் அம்புகள் இடப்பட்ட
அம்பறாத் துணி போன்ற
அவள் பாதங்கள் பிடித்துவிட்டனர்
கரும்பும் கசக்க
வாசிக்கப்படும் வீணை இசை
மண்டோதரி காதில் விழுந்தது
நறுமணம் மூக்கில் மணந்தது.
பாடல்-292:
வினையினால் விளையப்போகும் பயனை
எண்ணும் அறிவாளிகள்
பண்புக்குப் பொருத்தமற்றதைச் செய்வதில்லை
ஆசை அறுத்த ஆன்றோரும்
கீழோரின் கோபத்துக்கு ஆளானால்
நன்மை அடைவரா? தீமை அடைவரா?
பெருந்தென்றல் மீண்டும் மீண்டும்
சிந்தித்தது
துயிலும் மங்கையரிடம் செல்கிறது தென்றல்
“கட்டளை யாது?” என்று கேட்கிறது
ஊஞ்சல் போல
போவதும் வருவதுமாக இருக்கிறது காற்று.
பாடல்-293:
ஒளி வீசும் மாணிக்கங்களின் ஒளி அழியும்படி
மண்டோதரியின் உறங்கும் உடல்
ஒளி வீசியது
அனுமன் ஐயுற்றான்
மூண்டெழுந்த கொடுந்தீ
உயிரைச் சுட்டது போல சொன்னான்:-
பாடல்-294:
எலும்புடன் தொடர்புற்று
உடல் பெற்றதால் அடையும்
பெரும் பயன் இழந்தேன்” என்றவன்
தடையின்றி செல்லும் அனுமன்
மண்டோதரியை
சீதை என நினைத்தான்
அன்பாம் பாசத்தளைப் போக-
தெய்வ கற்பும் போக -
வாழ்கின்ற சீதை இவளெனில் -
“இராமனது புகழ்ப்பொலிவு அழியும்
இலங்கை அழியும்'
அரக்கரும் நானும் இன்றேஅழிவோம்” என்றான் அனுமன்.
பாடல்-295:
“சீதையோ -
மானிடப்பெண்களில் அழகி!
உறங்கும் இவளோ -
மாறுபட்டவளாக இருக்கிறாள்
இயக்கியோ !
அரக்க மங்கையோ!
இராமன் மீது அன்பு வைத்தவர்கள்
காமன் மீது ஏங்கார்கள்
இவள் சீதையாக இருக்கமுடியாது
அப்படி நினைத்தது தவறு” என்றான்.
பாடல்-296:
உத்தமப்பெண்ணின் இலக்கணம்
இவளிடமும் உள்ளன
என்றாலும்
இவள் உடம்பு விரைவில்
எல்லையற்ற துன்பம் அடையும் என்று எடுத்துச் சொல்கிறது
மலர் சூடிய கருங்குழல் அவிழ்ந்து
தூக்கத்தில் வாய் குழறி
சில வார்த்தைகள் சொல்வது
“இவள் கணவன் இறப்பான்” என்பதன் அடையாளம்
“இலங்கையும் அழியும்” என்பதன் அடையாளம்.
பாடல்-297:
இராவணனாலும் பெயர்க்க முடியாத கயிலை மலைபோன்ற
தோள்களை உடைய அனுமன்
”இவள் சீதையல்ல” என உணர்ந்து
அந்த எண்ணத்தை நிறுத்தினான்
அந்த கலக்கத்திலிருந்து விடுபட்டான்
மாளிகை விட்டு வெளியேறினான்
மாமேரு மலையை சிறிதாக்கும் ஒரு மாளிகை கண்டு
அதனுள் சென்றான்
பாடல்-298:
அந்த மாளிகைக்குள்
அனுமன் நுழைந்தபோது தீய சகுனங்கள் நிகழ்ந்தன
அவை என்ன?
பூமியின் இடங்கள் நடுங்கின
பெருமலைகள் குலுங்கின
அரக்க மகளிர் கண்களும் புருவங்களும்
தோள்களும் வலப்புறம் துடித்தன
எட்டுத் திசைகளும் நடுங்கின
மின்னல் இல்லாமலே
வானில் இடி முழக்கங்கள் ஒலித்தன
மங்கலமான பூரண கலசங்கள் வெடித்தன.
பாடல்-299:
மாளிகையில் புகுந்ததும் நிகழ்ந்த
தீய நிமித்தங்களை
கண்ணாலும் கருத்தாலும் நோக்கினான்
உய்யும் பொருள் உணர்ந்தான்
உள்ளம் நெகிழ்ந்தான்
“ஐயோ! இப்பெரிய நகரின் செல்வம் அழியும்
எந்த குலமாயினும்
இரு வினை உண்டு
விதியை விட வலிது ஏதுமில்லை” என நெகிழ்ந்தான்.
பாடல்-300:
வேல்படைப் பெருங்கடல்
அரக்கருடன் வெளியே இருக்க
ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது
திருமால் எனும் கருங்கடல் தங்கியது போல்
ஒப்பற்ற அழகு இராவணன் உறங்க
கடல் போன்ற நூலறிவுக்கடல் அனுமன்
நுணுக்கமான கேள்வி அறிவுக்கடல் அனுமன்
இராவணனைப் பார்த்தான்.
--அனுமனோடு மீட்போம்
“இராவணனின் தோள்களுக்குத்தான்
எத்தனை வலிமை!
மேருமலையை வில்லாக வளைத்து
சிவபெருமானின் கயிலை மலையை அசைத்தவை!
அப்படிப்பட்ட உயர்ந்த தோள்களில் பூசப்பட்ட சந்தனத்தை
தமது முலைகளால் கவர்ந்தோமே”
என்று நினைத்து இன்பம் அடைகிறார்கள்
சில இயக்க மங்கையர்கள்!
பாடல்-272:
உயர்ந்து எழும் நான்கு திசைக்கடல்கள்
ஒன்றாகக் கலந்து கோர்த்து
பெரு வெள்ளமாகும் பிரளயத்தில்
ஆடுகின்ற சிவனின் புகழை
தனது கை நரம்பினால்
பெரும் பண்களும் ஆசைப்படும்படி
பாடியது இராவணன் அன்றோ ! என புகழ் பாடுகின்றனர்
இயக்க மாதர்கள் சிலர்.
பாடல்-273:
இயக்க மாதர்கள் இப்படியாக இருந்த
பல்லாயிரம் வீடுகளைக் கடந்தான்
நீதிநெறி அனுமன்
பின்பு -
இராவணனின் குலம் சார்ந்த
அரசகுடும்ப அரக்கியர் வாழும்
இடத்தில் தேடப்புறப்பட்டான்.
பாடல்-274:
அரக்கியர் மாளிகைகள் -
சுவர்களில் பதிந்த மாணிக்கங்களால்
இருளிலும் ஒளி வீசின
அதனால் -
விளக்குகள்
தேவை இல்லை!
தோழியர் கூட்டம் நீங்கியதும்
அரக்கியர்கள் தனியே வாடினர்.
அவர்கள் மனங்களோ -
இராவணனோடு போய்விட்டது!
பாடல்-275:
அரக்கியர் சிலர்
கூந்தல் அழகு மிக்கவர்கள்
அக்கினிக் பிழம்பு மீது
கஸ்தூரிக்குழம்பு பூசியது போல இருப்பார்கள்
கூந்தல் மொய்க்கும் புகை
வண்டுகளுக்குச் சமம்!
மலர்ப்படுக்கை பகையாகி விட்டது
பளிங்குக்கல்லின் குளிர் மேடையில்
படுப்பினும்
காமம் தணியாமல் வளர
நெஞ்சு கொதிப்பானார்கள்.
பாடல்-276:
அரக்கியர் சிலர் -
மாலை நேர வானம் போல இருந்தார்கள்
எப்படி?
அவர்கள் ஒப்பற்ற உடம்பு -
பரப்பு மிக்க ஆகாயம்
அவர்கள் நெற்றி -
பிறைச்சந்திரன்!
அவர்களின் முத்து மாலை -
ஆகாய விண்மீன்கள்!
அவர்கள் இடை -
மின்னல் கொடி!
அவர்கள் திரண்ட கூந்தல் -
முருக்க மலரின் ஒளி கொண்ட செவ்வானம்!
மையுண்ட கண்கள் -
மேகம்!
பாடல்-277:
பிரிவுத்துயரை மறக்க
அரக்கியர் கண்ட இன்னொரு வழி இதுதான் :-
ஓங்கிய மாடம் ஏறினர்
எள்ளி நிலவொளி முற்றம் சென்றனர்
தோழியரும் வந்தனர்
நீலோற்பவ மலர் போன்ற கண்கள்
நிலவொளியால் நிறம் மாறின
சுருண்ட கூந்தல் மேகம் சரிய
வான நட்சத்திரம் கைகளால் பறித்து
அவற்றை கழற்சிக் காய்களாக எண்ணி
விளையாட முற்பட்டனர்!
பாடல்-278:
பிரிவுத்துயர் மறக்கச் செய்ய -
தேவமகளிரான பெண்டிர் கூட்டம் முயன்றது
ஆகாய கங்கை நீரைக் கொணர்ந்தனர்
அந்தக்குளிர்ச்சி போதவில்லை
கோபம் கொண்டனர் சிலர்
இரத்தினம் பதித்த மாடத்தில்
இடை தடுமாற ஏறிச் சென்று
மேகங்களை விரலால் கீறி
அதில் ஒழுகும் நீரில்
மஞ்சனம் ஆடினர்!
பாடல்-279:
இன்னும் சிலர் -
“பாம்பரசனின் செந்நிற மாணிக்கத்தை
இன்னுயிர்க் கணவன் இராவணன்
வலிதில் பறித்து
எனக்கு கொடுத்தான்
இது எனக்கு சூதாடும் காய்!” என்கின்றனர்.
பாடல்-280:
இன்னும் சிலர்
ஆடல் காணத் துவங்கினர்
யாருடைய ஆடல்?
பொன்மாளிகையில் முத்துப்பந்தல் கீழ்
அழகிய குடமுழாவின் தாளத்திற்கு
சித்த கன்னிகள் பாட
அழகிய தோள்கள் உடைய
அரம்பையர் ஆடுகின்றனர்!
பாடல்-281:
இன்னும் சிலருக்கு அழுகை!
ஆணி போன்று அறைந்த காதல்
அகம் சுட்டது
அருவி உண்டது போல் கண்கள் அழுகின்றன
````````````````````````````````````உறக்கம் தீர்ந்து``````விட்டது`
வீணையின் குரலும் அவர்கள் குரலும்
வேறு வேறு அல்ல எனுமளவில்
சிலர் பாடவும் செய்தனர்!
பாடல்-282:
சில அரக்கியர்கள் உண்டது -
உறைப்பான “கள்”!
அதனால் மயங்கிச் சுழன்றன
கண்கள்!
குரவை பாடினர்
கூத்தாடினர் ஆரவாரமுடன்!
அப்போது -
வாழை மரத்தின் அடித்தண்டு போன்ற
தொடைகளின் நடுவில் உள்ள
அல்குல் எனும் தட்டின் மீது
கட்டிய சேலைகள் தாழ்ந்தன
இடை அணிகளும் தாழ்ந்தன
அணிந்த குண்டலங்கள் ஒளி வீசின.
பாடல்-283:
இன்னும் சில அரக்கியர் -
பல வகைப் பிராணிகளின்
குருதி குடித்து மயங்கினர்
நாக நஞ்சு போன்ற கள் குடித்தனர் அதனால் -
“குச்சரி” எனும் பண் தன்மை
குரலில் கலந்து பைத்தியம் போல் பிதற்றினர்
“சச்சரி” எனும் தோல் கருவி போல
கைகள் தட்டினர்.
அல்குலின் மீது அணிந்த
மெல்லிய ஆடையையும் கிழித்துக் கொண்டனர்
“கலாபம்” எனும் இருபத்தைந்து இடை அணியும்
கிழித்துக் கொண்டனர்!
பாடல்-284:
சில அரக்கியர் -
தயிர் நிறம் கொண்ட கள் பருகினர்
மனம் தடுமாறினர்
அறிவு மயங்கினர்
ஆரவாரித்தனர்
“என் மேல் தெய்வம் வந்தது!” என்றுபெருமூச்சு விட்டனர்
இரண்டு கைகளையும் தலை மே உயர்த்தி சிலிர்த்து
உடல் கூசி
வாய் திறந்து கதறி ஓய்ந்தனர்.
பாடல்-285:
இப்படியாகப்பட்ட அரக்க மகளிர்
வரிசையாக வசித்த நான்கு கோடி வீடுகளிலும்
அனுமன் தேடிப்பார்த்தான் சீதையை!
கிட்டவில்லை!
சித்தர்களின் பெண்நிலையான
சித்தியர்கள் வாழும் தெருவும் கடந்தான்
வித்தியாதர மகளிர் வீதிகள் அடைந்தான்.
பாடல்-286:
வித்தியாதர மகளிருக்கு
தன் கணவனாகிய இராவணன் மீது
நாளும் நாளும் வளரும் காதல்!
ஆனால் -
சுறாமீன் வடிவு பொறித்த
நீண்ட மகுடம் பூண்ட
இராவணன் வருதலோ நிகழவில்லை
அதனால் -
அவர்களது தளர்ந்த மனம்
அவர்களது இடையைக் காட்டிலும் அதிகம் துடித்தது!
ஆறுதல் தந்திட
எழுப்பிய இசையோ
நாகம் -
செவியில் நுழைந்தது போல துன்புறுத்தியது.
பாடல்-287:
“நன்னெறி முனிவர்களுக்கும் தேவர்களுக்கும்
சரண்புக இடமில்லாமல் துன்பம் செய்த
இராவணன் மீது அன்பு மிக்க
வித்தியாதர மகளிரை நாம்
பகைத்தே தீர வேண்டும்” என்று
முடிவெடுத்த குளிர் சந்திரன்
அரக்கியர் முலைகளை சுட்டெரிக்கிறான்
அதனால் சிலர் -
பூங்கொடிகள் போல வதங்கினர்.
பாடல்-288:
இராவணன் மீது கொண்ட காதலால்
வித்தியாதர மகளிர் சிலருக்கு
நிமிடம் , வினாடி முதலிய
சொற்ப காலங்கள் கூட
கற்ப காலங்களாக நீண்டன
முன்பு அவனைத் தழுவியதால்
முலையில் படிந்த சந்தனம்
கண்டு பெருமூச்சு விட்டார்கள்
முன்பு அவன் வரைந்த
“தொய்யில்” எனும் குறிகளும்
அவர்கள் உயிர் பிளந்து வருத்த
கண்கள் சிவந்தன!
பாடல் -289:
இப்படியாக -
வித்தியாதர மங்கையர் வாழும்
பனிரெண்டு கோடி மாளிகைகள் கொண்ட
நெடிய தெரு முழுதும் சீதையைத் தேடினான்
அடுத்து -
மூன்று உலக அதிபதியாம் இராவணனின்
பெரும் அரண்மனை நெருங்கினான்
அங்கே -
சந்திரன் தோற்கும் சுந்தரமுகம் கண்டான்
மயன்மகள் மண்டோதரி
வசிக்கும் மாளிகை கண்டான்!
பாடல்-290:
அனுமனுக்கு ஒரே பேரின்பம்!
“நமது தேடும் பணி நிறைவுற்றது
மற்ற மாளிகையில்
இல்லாத சிறப்பு இதற்கு உண்டு
அது எது?
இராமனின் உயிரை விடவும் சிறந்த சீதை
வசிக்கும் பெருமை அது!
எல்லா வீடுகளும் மணிகள் அதில் -
திருமால் மார்பில் உள்ள
“கெளத்துபம்” எனும் மணி போன்றது இம்மாளிகை!
பாடல்-291:
அந்த மாளிகையில் இருந்தது சீதையல்ல
மண்டோதரி!
அரம்பை மேனகை திலோத்தமை
ஊர்வசி முதலானவர்கள்
மலர் அம்புகள் இடப்பட்ட
அம்பறாத் துணி போன்ற
அவள் பாதங்கள் பிடித்துவிட்டனர்
கரும்பும் கசக்க
வாசிக்கப்படும் வீணை இசை
மண்டோதரி காதில் விழுந்தது
நறுமணம் மூக்கில் மணந்தது.
பாடல்-292:
வினையினால் விளையப்போகும் பயனை
எண்ணும் அறிவாளிகள்
பண்புக்குப் பொருத்தமற்றதைச் செய்வதில்லை
ஆசை அறுத்த ஆன்றோரும்
கீழோரின் கோபத்துக்கு ஆளானால்
நன்மை அடைவரா? தீமை அடைவரா?
பெருந்தென்றல் மீண்டும் மீண்டும்
சிந்தித்தது
துயிலும் மங்கையரிடம் செல்கிறது தென்றல்
“கட்டளை யாது?” என்று கேட்கிறது
ஊஞ்சல் போல
போவதும் வருவதுமாக இருக்கிறது காற்று.
பாடல்-293:
ஒளி வீசும் மாணிக்கங்களின் ஒளி அழியும்படி
மண்டோதரியின் உறங்கும் உடல்
ஒளி வீசியது
அனுமன் ஐயுற்றான்
மூண்டெழுந்த கொடுந்தீ
உயிரைச் சுட்டது போல சொன்னான்:-
பாடல்-294:
எலும்புடன் தொடர்புற்று
உடல் பெற்றதால் அடையும்
பெரும் பயன் இழந்தேன்” என்றவன்
தடையின்றி செல்லும் அனுமன்
மண்டோதரியை
சீதை என நினைத்தான்
அன்பாம் பாசத்தளைப் போக-
தெய்வ கற்பும் போக -
வாழ்கின்ற சீதை இவளெனில் -
“இராமனது புகழ்ப்பொலிவு அழியும்
இலங்கை அழியும்'
அரக்கரும் நானும் இன்றேஅழிவோம்” என்றான் அனுமன்.
பாடல்-295:
“சீதையோ -
மானிடப்பெண்களில் அழகி!
உறங்கும் இவளோ -
மாறுபட்டவளாக இருக்கிறாள்
இயக்கியோ !
அரக்க மங்கையோ!
இராமன் மீது அன்பு வைத்தவர்கள்
காமன் மீது ஏங்கார்கள்
இவள் சீதையாக இருக்கமுடியாது
அப்படி நினைத்தது தவறு” என்றான்.
பாடல்-296:
உத்தமப்பெண்ணின் இலக்கணம்
இவளிடமும் உள்ளன
என்றாலும்
இவள் உடம்பு விரைவில்
எல்லையற்ற துன்பம் அடையும் என்று எடுத்துச் சொல்கிறது
மலர் சூடிய கருங்குழல் அவிழ்ந்து
தூக்கத்தில் வாய் குழறி
சில வார்த்தைகள் சொல்வது
“இவள் கணவன் இறப்பான்” என்பதன் அடையாளம்
“இலங்கையும் அழியும்” என்பதன் அடையாளம்.
பாடல்-297:
இராவணனாலும் பெயர்க்க முடியாத கயிலை மலைபோன்ற
தோள்களை உடைய அனுமன்
”இவள் சீதையல்ல” என உணர்ந்து
அந்த எண்ணத்தை நிறுத்தினான்
அந்த கலக்கத்திலிருந்து விடுபட்டான்
மாளிகை விட்டு வெளியேறினான்
மாமேரு மலையை சிறிதாக்கும் ஒரு மாளிகை கண்டு
அதனுள் சென்றான்
பாடல்-298:
அந்த மாளிகைக்குள்
அனுமன் நுழைந்தபோது தீய சகுனங்கள் நிகழ்ந்தன
அவை என்ன?
பூமியின் இடங்கள் நடுங்கின
பெருமலைகள் குலுங்கின
அரக்க மகளிர் கண்களும் புருவங்களும்
தோள்களும் வலப்புறம் துடித்தன
எட்டுத் திசைகளும் நடுங்கின
மின்னல் இல்லாமலே
வானில் இடி முழக்கங்கள் ஒலித்தன
மங்கலமான பூரண கலசங்கள் வெடித்தன.
பாடல்-299:
மாளிகையில் புகுந்ததும் நிகழ்ந்த
தீய நிமித்தங்களை
கண்ணாலும் கருத்தாலும் நோக்கினான்
உய்யும் பொருள் உணர்ந்தான்
உள்ளம் நெகிழ்ந்தான்
“ஐயோ! இப்பெரிய நகரின் செல்வம் அழியும்
எந்த குலமாயினும்
இரு வினை உண்டு
விதியை விட வலிது ஏதுமில்லை” என நெகிழ்ந்தான்.
பாடல்-300:
வேல்படைப் பெருங்கடல்
அரக்கருடன் வெளியே இருக்க
ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது
திருமால் எனும் கருங்கடல் தங்கியது போல்
ஒப்பற்ற அழகு இராவணன் உறங்க
கடல் போன்ற நூலறிவுக்கடல் அனுமன்
நுணுக்கமான கேள்வி அறிவுக்கடல் அனுமன்
இராவணனைப் பார்த்தான்.
--அனுமனோடு மீட்போம்
No comments:
Post a Comment