Thursday, 1 August 2013

வார்த்தைச் சிக்கல்

இன்று நேற்றல்ல - இது அன்புக்கு ஏங்கும் பல கோடி மனிதர்களின் சிக்கல்!
அது எது? ஆம்! அதுதான் -
அன்பற்ற மனிதர்களின் வார்த்தையில் இருக்கும் வெப்பம் ! அதனை வடிகட்ட
ஒரு தனி இதயமே வேண்டும் !
எனக்குத் தெரிந்த மனிதர்கள் சிலர் சொல்லில் இருக்கும் -
சூட்டுக்குச் சமமாய்  பாய்லர் வெப்பமும் சுடவில்லை!
வேறு ஒரு வெப்பப் பொருள் காணவில்லை !
 சொற்களில் இருக்கும் மாலை நிழலை , ஏன் அறியாமல் பலர் வாழ்கின்றனர்!
சொற்களில் தேள் செய்யும் மனிதர்கள் குறித்து
ரகசியமாய் அஞ்சும் நான்-
சொற்களில் சிரிக்கும் மாலை மஞ்சள் வெய்யிலை  பகிரங்கமாய் அறிவேன்!!
நொணாப்பூ வாசம் போன்ற -
தெள்ளிய வாசம் நிரம்பிய சொற்கள் கூறினால் -
அவசர ஆத்திரமாய் -
உடனே  ஓர் அபத்தப் பேச்சின் சாலை திறக்கிறான் எதிர் பேச்சாளி!
என்ன செய்வது!
இப்போது புரிகிறது -      
நல் சொற்களில் விளையும் மகத்துவம் அறியாதவர்களே
கீறல் விழுந்தவற்றையும்
பிறரைக் கீறி விடும் சொற்களையுமே கூறுகின்றனர் !!
எப்போதாகினும் நேரமிருப்பின் என்று சொல்லமாட்டேன்- மனிதர்களே !
எவ்வப்போது இயலுமோ எந்த எந்த இடத்தில் இயலுமோ -
அங்கெல்லாம் நிரப்புங்கள்-
இனிமை நிரம்பிய உங்கள் ஆழமான சொல்லை என்பேன்!!!

*****                                                

No comments:

Post a Comment