Thursday, 9 May 2013

பாடல்-9 :

அனுமனின் பாத பலத்தால் - 
மலையின்  உச்சியில்
மகா அழுத்தம்!
அங்குள்ள சுனைநீர்ப் பெருக்குகள் மிதிபட்டன
காவிக்கற்களில் மோதி சிவப்பானது சுனைநீர்
சிவப்பு சந்தனக் கட்டைகளாலும் சிவப்பானது.
குங்குமப்பூக்களும் மகரந்தப்பூக்களும் சிவப்பு
குலிகம் சிவப்பு
எல்லாம் கலந்து சுனை நீரும் சிவப்பு
மகேந்திரமலையின் வயிறு கிழிந்து
இரத்தம் சொரிகிறதுபோல் உள்ளதே!

பாடல்-10:
அனுமன் -   
மிதிபட்டு மிதிபட்டு
கலங்கிய மலை
இப்போது- 
அனுமனின் குதிப்பினால்
அன்று பாற்கடல்கலக்கிய மத்துபோல் சுழல்கிறது.

பாடல்-11:

மகேந்திரமலை - 
இப்போது
வெடித்தே விட்டது.
மயில் போன்ற அழகிய மனைவிகள்
தத்தம் கணவராகிய தேவர்களைத் தழுவும் காட்சி
இராவணன் கயிலை மலை தூக்கிட
அஞ்சிய பார்வதி தழுவிய சிவபெருமானுக்கு நிகர்த்தது!

பாடல்-12:
தேவமகளிர்
முதலில் - 
கணவரிடம் ஊடல் கொண்டது
மது அருந்திய மயக்கத்தாலும்
கணவர் செய்த பிழையாலும்.
இப்போது -  
தேவமகளிர் அச்சம் அடையக் காரணம் - 
மலையில் ஏற்படும் அதிர்ச்சியால்!

அதிர்ச்சியும் பயமும் அவர்களை
தத்தம் கணவரைத் தழுவிக் கொண்டே
வானம் செல்ல வைத்தன

செல்லும்போது அந்த மென்மனங்கள் நினைத்துக் கொண்டன -  
“மலையிலேயே பைங்கிளிகளை விட்டுவிட்டோமே!”

No comments:

Post a Comment