Sunday, 13 January 2013

திருப்பாவையில் ஓம்

மார்கழி:29
திருப்பாடல்:29

மறு ஜன்ம பயம் எல்லோருக்கும் இருக்கிறது. கண்ணன் அடியவர்களுக்கு அது இல்லை. ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இல்லை. ஏன்? அவர்கள் எழுகின்ற பிறவிதோறும் கண்ணா - நீயும் எங்கள் குலத்திலேயே பிறந்துவிட்டால் பிறவித்துன்பம் தீண்டாமல் நீயே பார்த்துக்கொள்வாய் அல்லவா! என்று விண்ணப்பம் வைக்கிறார்கள். எற்றைக்கும் (என்றும்) எத்தனைப் பிறவி எடுத்து எழுந்தாலும் (ஏழேழ் பிறவிக்கும்) உனக்கு உற்றவராகவே யாம் இருப்போம். (இருப்பு+ ஓம்) உனக்கே நாம் ஆள் (பணி) செய்வோம் (செய்தல்+ஓம்) கண்ணா! எமது காமங்களை (விருப்புகளை) மாற்றி நல்ல திசையில் செலுத்தி அருள்வாய்.

திருப்பாடல்:

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ எம்பாவாய்.



No comments:

Post a Comment