மார்கழி:28
திருப்பாடல்:28
“நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம்” என்பான் கம்பன். நம்பிக்கையே இல்லாதபோதுதான் நம்பிக்கையாய் அதிகம் பேச வேண்டும். உலகப்பற்றிலேயே மூழ்கிப்போய் எப்போதும் பணம் பணம் என்று மண்டியிடும் சந்தர்ப்பத்திலும் , நமக்கு பக்தியே அற்றுவிட்டதோ என்று நம்மையே நாம் சந்தேகமாய் நினைக்கும் தருணத்திலும் “இறைவா உன்னோடு உறவு நமக்கு என்றும் ஒழியாது. அழியாது” என்று குறை ஒன்றுமில்லாத கோவிந்தனைத் துதிக்கவேண்டும். அற்¢யாத பிள்ளைகள் நாங்கள். நாங்கள் அழைப்பதில் குறை இருக்கத்தான் செய்கிறது. அதற்காக சீறிவிடாதீர். இப்படியெல்லாம் பணிவுடன் கேட்கின்றனர். ஆனால் பெருமாள் முகத்தைப்பாருங்கள். குறைவு ஏதேனும் கண்ணில் தெரிகிறதா? சீறக்கூடிய ஸ்வாமியாக அவரில்லை. பூரணமான ஸ்வாமி அவர். அவரைப் பற்றுவோம். கரையேறுவோம்.
திருப்பாடல்:
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ எம்பாவாய்.
திருப்பாடல்:28
“நம்புவதே வழி என்ற மறைதன்னை நாம் இன்று நம்பிவிட்டோம்” என்பான் கம்பன். நம்பிக்கையே இல்லாதபோதுதான் நம்பிக்கையாய் அதிகம் பேச வேண்டும். உலகப்பற்றிலேயே மூழ்கிப்போய் எப்போதும் பணம் பணம் என்று மண்டியிடும் சந்தர்ப்பத்திலும் , நமக்கு பக்தியே அற்றுவிட்டதோ என்று நம்மையே நாம் சந்தேகமாய் நினைக்கும் தருணத்திலும் “இறைவா உன்னோடு உறவு நமக்கு என்றும் ஒழியாது. அழியாது” என்று குறை ஒன்றுமில்லாத கோவிந்தனைத் துதிக்கவேண்டும். அற்¢யாத பிள்ளைகள் நாங்கள். நாங்கள் அழைப்பதில் குறை இருக்கத்தான் செய்கிறது. அதற்காக சீறிவிடாதீர். இப்படியெல்லாம் பணிவுடன் கேட்கின்றனர். ஆனால் பெருமாள் முகத்தைப்பாருங்கள். குறைவு ஏதேனும் கண்ணில் தெரிகிறதா? சீறக்கூடிய ஸ்வாமியாக அவரில்லை. பூரணமான ஸ்வாமி அவர். அவரைப் பற்றுவோம். கரையேறுவோம்.
திருப்பாடல்:
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ எம்பாவாய்.
No comments:
Post a Comment