மார்கழி:27
திருப்பாடல்:27
கண்ணபெருமானே உமது வெற்றி எமது வெற்றி. உன்னைப் பறை கொண்டு பாடுகிறோம். அப்போது எங்களுக்கு நாங்களே பலவித அணிகலன்கள் (தோடு ,செவிப்பூ) அணிந்து சந்தோஷப்படுகிறோம். பால்சோற்றை மூடுமாறு நெய் ஊற்றி சாப்பிடுவோம். அப்போது அந்தநெய் முழங்கை வரையில் வழிகிறது. இப்படிப்பட்ட மகிழ்ச்சியான உணவை கூடியிருந்து உண்கின்றோம். உள்ளம் குளிர்ந்தது கண்ணா! உனது அருள் என்பது எமது ஆன்மாவின் உணவு. வயிற்றுப்பசியை எவ்விதம் சேர்ந்து உண்டு சொந்த பந்தங்களுடன் உண்பதற்கு ஆசைப்படுகிறோமோ உனது அருள் உண்டு பசியாற நாங்கள் ஒன்றுகூடி உள்ளோம். மார்கழி குளிர் வேறுவகை. இப்போது உமது அருள் பெறும் நேரம் கூடிஇருக்கிறது. இப்போது உள்ளம் குளிர்கிறது!
திருப்பாடல்:
கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பாறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையை தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ எம்பாவாய்.
திருப்பாடல்:27
கண்ணபெருமானே உமது வெற்றி எமது வெற்றி. உன்னைப் பறை கொண்டு பாடுகிறோம். அப்போது எங்களுக்கு நாங்களே பலவித அணிகலன்கள் (தோடு ,செவிப்பூ) அணிந்து சந்தோஷப்படுகிறோம். பால்சோற்றை மூடுமாறு நெய் ஊற்றி சாப்பிடுவோம். அப்போது அந்தநெய் முழங்கை வரையில் வழிகிறது. இப்படிப்பட்ட மகிழ்ச்சியான உணவை கூடியிருந்து உண்கின்றோம். உள்ளம் குளிர்ந்தது கண்ணா! உனது அருள் என்பது எமது ஆன்மாவின் உணவு. வயிற்றுப்பசியை எவ்விதம் சேர்ந்து உண்டு சொந்த பந்தங்களுடன் உண்பதற்கு ஆசைப்படுகிறோமோ உனது அருள் உண்டு பசியாற நாங்கள் ஒன்றுகூடி உள்ளோம். மார்கழி குளிர் வேறுவகை. இப்போது உமது அருள் பெறும் நேரம் கூடிஇருக்கிறது. இப்போது உள்ளம் குளிர்கிறது!
திருப்பாடல்:
கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பாறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையை தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ எம்பாவாய்.
No comments:
Post a Comment