Sunday, 13 January 2013

திருப்பாவையில் ஏது கடைசி ?

மார்கழி:30
திருப்பாடல்:30



“வங்கக்கடல் கடைந்த”திருப்பாவையின் கடைசி பாடல் இது. ஆனால் திருப்பாவையான ஆண்டாளின் அன்புக்கு கடைசி என்பது இல்லை. அன்பை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு பொருளும் அருளும் வந்து கொண்டேதான் இருக்கும். வஞ்சனையாய் பொருள் சுருட்டுகிறவர்கள் குறித்து “நாம் அவன் போல் ஏமாற்றி வாழ்ந்திட அறியவில்லையே” என்றெல்லாம் ஏங்குவது எதற்கு? ஸ்வாமி தந்திருப்பது குறைவற்ற பக்தி. அவன் நம்மை உடையவன். அவன் நம் கையைப் பற்றி இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நம்மை ஆட்படுத்திக் கொண்டவன். “வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை” என்று வாழ்வதற்குரிய உயர் எண்ணங்கள் அனைதையும் நமது நெஞ்சின் உள்ளே பிறக்கும்போதே வைத்து அனுப்பியவன். அவன் என்றும் நம் துணை. ஆம். அவன் வங்கக் கடல் கடைந்த மாதவன். நமது உள்ளக்கடலையும் அறிந்தவன்!

திருப்பாடல்:

வங்கக்கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
தங்கள் திருமுகத்துச் சேழியையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலர்த் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


No comments:

Post a Comment