Sunday, 13 January 2013

திருப்பாவையில் ஒருத்தி

மார்கழி :25
திருப்பாடல்:25



“ஒருத்தி” என்ற சொல் நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கும் சொல். “ஒரு பெண்” என்று அதன் அர்த்தம் இருந்தாலும் அந்த ஒரே பெண் யார்? என்றும் நம்மை யோசிக்க வைக்கும். தாய் நம்மைப் பெற்ற முதல் பெண். வளர்கிறோம். இன்னொரு பெண் நம் வாழ்வில் நானே தாரம் என்கிறாள். முதல் ஆதாரமாய் இருந்தவளும் பெண், வளர்த்து ஆளாக்கி அவள் இன்னொரு பெண்ணின் கரங்களில் ஒப்படைக்கிறாள்.இதனை கண்ணதாசன், “ இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்” என்று பாடத்தொடங்கி “பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்” என்கிறார். இது இயற்கையின் திட்டம். நிற்காத சுழற்சி. இதனை தடுக்க நினைப்பவருக்கு கண்ணபெருமான் நெருப்பென்ன நின்று அழித்து முடிப்பான்.                                  




திருப்பாடல்:

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருந்தித்து வந்தோம் பறைதகுதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment