Friday, 11 January 2013

திருப்பாவையில் வீரம்


மார்கழி:24
திருப்பாடல்:24

வீரம் மிகுந்தவரைப் பணிந்தால் சேவகம் செய்தால் நமக்கும் வீரம் வரும். உலகை அளந்த வீரம், தென் இலங்கையில்  வென்றாய். மலையைத் தூக்கி குடையாகப் பிடித்தாய். எங்களது பகையை அழிப்பாயாக. பெருமாளே எங்களுக்கு இரங்குவாயாக.


திருப்பாடல்:
 
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment