Friday, 11 January 2013

திருப்பாவையில் மெல் ஒலிகள் கூட்டம்

திருப்பாடல்-18
மார்கழி-18


பொதுவாக நாம் ஓசை உலகில் உள்ளோம். அதன் மூலமே புரிகிறோம். கூந்தலில் உள்ள வாசனை கூட “கந்தம் கமழும் குழலீ” என்ற சொல்லால் புரிய வைக்கப்படுகிறது. ஆனால் இந்தப்பாடலை உலகியல் வழக்கில் அப்படியே அர்த்தம் கொள்ளாமல் தியான நிலைக்கு உயர்த்தியும் பார்க்கலாம். “எனக்கு என் தியானத்தில் ஒரு காட்சியும் வரவில்லையே.. பதில் குரல் ஒன்றும் வரவில்லையே.. நான் ஆதி பரமனுடன் இணைக்கப்பட்டதை எப்படி எதனைக்கொண்டு அறிவது?” என்று சிலர் வருந்துவார்கள். அதன் பதிலை, குயில்கள் போன்ற கவன ஈர்ப்புகளை தாண்டி - அழகிய வளையல்கள் ஓசையுடன் அம்மை கதவு திறக்கும் ஓசையுடன் பொருத்தி மிக கவனமுடன் நாம் (கழறிற்று அறிவார் நாயனார் போல) நிச்சயம் உணர்வோம்.

திருப்பாடல்:

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பினாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால்  குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறப்பாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment