Friday, 11 January 2013

திருப்பாவையில் பெண்மையின் சக்தி

திருப்பாவை - 19
மார்கழி - 19


“நப்பின்னைகொங்கைமேல் வைத்துக்கிடந்த  மலர் மார்பா” தந்தக்கட்டில் போட்டு- சுற்றிலும் விளக்குகள் எரிய -  தனது மலர் மார்பை நப்பின்னையின் கொங்கைமேல் வைத்து - உறங்குகிறான் . அடடா! எத்தனை அழகிய காதல் உறக்கம்! நேரமோ மார்கழி!
ஆனால் இப்பாடலில் இந்த காட்சியின் முக்கிய சக்தியாக  - ஒன்று இருக்கிறது. இப்படிப்பட்ட தூக்கம் கலையாமல் இருப்பதற்கு பொறுப்பு சக்தியிடம்தான் உள்ளது.  அவள் கையில்தான் அவன்! எனவே அவளை எழுப்புகிறார்கள் கெட்டிக்காரத் தோழிகள்! பிரிய முடியவில்லையோ என்று ஆதாரமான கேள்வி கேட்கிறார்கள்.   

திருப்பாடல்:

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்று பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment